மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்

மருத்துவ உதவி

திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு – ஆதிரங்கம் கிளை சார்பாக 7.12.2011 இரு ஏழை பெண்ம‌னிகளுக்கு மருத்துவ உதவியாக ரூ 6000 /- வழங்கப்பட்டது.

குர்பானி தோல் விற்ற நிதியிலிருந்து பன்னையத்தெருவை சேர்ந்த கேன்சரால் அவதிப்படும் ஏழை பெண்ம‌னிக்கு ரூ5000 மும் VRM தெருவை சேர்ந்த கணவரை இழந்த ஏழை பெண்ம‌னிக்கு 1000 மும் வழங்கப்பட்ட

http://www.tntj.net/60707.html


பெமினா சூப்பர் மார்கெட்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு – ஆதிரங்கம் கிளை சார்பாக கடந்த 13/12/2011 பொதுமக்கள் கூடும் சூப்பர் மார்கெட்டில் திருக்குரான் தமிழாக்கம் வைக்கப்டப்பட்டு தஃவா செய்யப்பட்டது

வீதியின் ஒழுக்கங்கள்

வீதியில் செல்லும் போது பார்வையைத் தாழ்த்தி செல்ல வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: (முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அல்குர்ஆன் 24:30, 31

வீதியில் ஆணவத்துடன் நடப்பது கூடாது

அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் உரையாடும் போது ''ஸலாம்'' எனக் கூறுவார்கள். அல் குர்ஆன் 25:63

மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

''நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப் பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'' அல் குர்ஆன் 31:18, 19

வீதிக்குச் செய்ய வேண்டிய கடமைகள்

''நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் ''எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறுவழியில்லை. அவை தாம் நாங்கள் பேசிக் கொள்கின்ற எங்கள் சபைகள்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் ''அப்படி நீங்கள் அந்த சபைகளுக்கு வந்து தான் ஆகவேண்டுமென்றால் பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள் ''பாதையின் உரிமை என்ன?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ''பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், (பாதையில் செல்வோருக்கு சொல்லாலோ, செயலாலோ) துன்பம் தராமல் இருப்பதும். ஸலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையி­ருந்து தடுப்பதும் அதன் உரிமைகள் ஆகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ர­லி) நூல்: புகாரி 2465

மற்றொரு அறிவிப்பில் ''அழகிய பேச்சைப் பேசுதலும்'' பாதைக்குச் செய்ய வேண்டிய கடமையாகக் கூறப்பட்டுள்ளது. அறிவிப்பவர்: அபூ தல்ஹா (ர­லி) நூல் முஸ்­லிம் 4365

பாதையில் கிடக்கின்ற தொல்லை தருகின்ற பொருட்களை அகற்றுதல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''தொல்லை தரும் பொருளை பாதையி­ருந்து அகற்றுவது தர்மமாகும்'' அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ர­லி) நூல்: புகாரி 2631

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஈமான் என்பது எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டதாகும். அவற்றில் மிகச் சிறந்தது ''லாயிலாஹ இல்லல்லாஹ்'' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை) என்று கூறுவதாகும். அவற்றில் இறுதியானது பாதையில் கிடக்கின்ற இடையூறு தரக்கூடிய பொருட்களை அகற்றுவதாகும். வெட்கமும் ஈமானுடைய கிளைகளில் ஒன்றாகும்'' அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ர­லி) நூல்: முஸ்­லிம் 58

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஒரு மனிதர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளைக் கிடப்பதைக் கண்டு அதை அந்தப் பாதையை விட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதை விட்டும்) பிற்படுத்தி விட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான், பாவமன்னிப்பும் வழங்குகிறான்'' அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ர­லி) நூல்: புகாரி 652

மக்கள் நடமாடும் பாதைகளிலும் நிழலுக்காக ஒதுங்கும் இடங்களிலும் மலம் ஜலம் கழித்தல் கூடாது

''சாபமேற்படக் கூடிய இரண்டு விஷயங்களை அஞ்சிக் கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஸஹாபாக்கள் ''சாபமேற்படக்கூடிய இரண்டு விஷயங்கள் என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ''மக்கள் நடமாடும் பாதைகளிலும் நிழலுக்காக ஒதுங்கும் இடங்களிலும் மலம் ஜலம் கழிப்பதாகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ர­லி) நூல்: முஸ்­லிம் 448

அனுமதி கோருதல்

நம்முடைய வீட்டிற்குள் நுழையும் போதும் ஸலாம் கூறவேண்டும்.

வீடுகளில் நுழையும் போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான். அல் குர்ஆன் 24:61

பிறருடைய வீடுகளுக்குள் நுழையும் முறை

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள். அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்! ''திரும்பி விடுங்கள்!'' என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன். அல் குர்ஆன் 24:27

அனஸ் (ர­லி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ''நபி (ஸல்) அவர்கள் (சபையோருக்கு அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) ஸலாம் கூறினால் மூன்று முறை ஸலாம் கூறுவார்கள்.''நூல்: புகாரி 6244

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பி விடட்டும்'' அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ர­லி) நூல்: புகாரி 6245

நாம் செல்லும் வீட்டாருக்கு நம்மைப் பற்றி தெளிவாகக் கூறவேண்டும்.

ஜாபிர் (ர­லி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ''என் தந்தை ஒரு யூதருக்கு கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன். அப்போது அவர்கள் ''யார் அது?'' என்று கேட்டார்கள். அதற்கு நான் ''நான் தான்'' என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''நான், நான் என்றால்....?'' என அதை விரும்பாதவர்களைப் போன்று கூறினார்கள். நூல்: புகாரி 6250

பிறருடைய வீடுகளுக்குள் எட்டிப் பார்ப்பதோ ஒட்டுக் கேட்பதோ கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''உங்கள் அனுமதியின்றி ஒருவர் உங்கள் வீட்டிற்குள் எட்டிப் பார்த்த போது, அவர் மீது நீங்கள் சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரது கண்ணைப் பறித்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை'' அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ர­லி) நூல்: புகாரி 6902

ஸஹ்ல் (ர­லி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் அறையின் கதவிடுக்கில் எட்டிப் பார்த்தார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் (இரும்பாலான) ஈர்வ­ச் சீப்பொன்று இருந்தது. அதனால் தமது தலையை அவர்கள் கோதிக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்த போது ''என்னை நீ பார்க்கிறாய் என்பதை நான் (முன்பே) அறிந்திருந்தால் இந்தச் சீப்பினால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதினாலேயே ''அனுமதி கேட்க வேண்டும்'' என்பது சட்டமாக்கப்பட்டது'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 6901

அனுமதி பெறாமல் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்ட இடம்

யாரும் குடியிருக்காத வீட்டில் உங்களின் பொருள் இருந்தால் அங்கே நுழைவது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைப்பதையும் அல்லாஹ் அறிகிறான். அல் குர்ஆன் 24:29

குழந்தைகளும் அனுமதி பெற்று வீட்டிற்குள் நுழைய வேண்டிய மூன்று நேரங்கள்

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பக­ல் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க(நேர)ங்கள். இதன் பின்னர் அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். அல் குர்ஆன் 24:58, 59

அனுமதி கோரும் முறை

பனூ ஆமிர் குலத்தைச் சார்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கள் வீட்டில் இருக்கும் போது ''நான் நுழையலாமா?'' என்று அனுமதி கோரினார். நபியவர்கள் தன்னுடைய பணியாளருக்கு ''நீ வெளியே அவரின் பக்கம் சென்று அவருக்கு அனுமதி பெறும் முறையைக் கற்றுக் கொடு! 'அஸ்ஸலாமு அலைக்கும். நான் நுழையலாமா?' என்று (அனுமதி பெறும்போது) கூறவேண்டும் என்று அவருக்குச் சொல்'' என்று கூறினார்கள். அம்மனிதர் இதனைச் செவியேற்றார். உடனே ''அஸ்ஸலாமு அலைக்கும்'' என்று கூறி ''நான் நுழையலாமா?'' என்று (அனுமதி கோரினார்) நபியவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள்.
அறிவிப்பவர்: ரிப்ஈ நூல்: அபூ தாவூத் 4508

ஹ‌ஜ் பெருநாள்

ஹ‌ஜ் பெருநாள் தொழுகை 7/11/11 அன்று காலை ச‌ரியாக‌ காலை 7:25 க்குஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌துஆண்க‌ளும் பெண்க‌ளும் திர‌ளாக‌ க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்






8/11/2011 கூட்டு குர்பானி மாடு3 மாட்டுக்கு 21 ப‌ங்குக‌ள் சேர்க்க‌ப்ப‌ட்டு ந‌ம‌தூரில் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து. கூடுத‌ல் ப‌ங்குக‌ள் சேர்ந்தும் க‌டைசி நேர‌த்தில் மாடுக‌ள் விலை அதிக‌ம‌னதாலும் நாம் குறிப்பிட்ட‌ தொகைக்கு மாட்டில் விலையை நிர்ன‌யிக்க‌ முடியாத‌தால் மேலும் சில த‌விர்க்க‌ முடியாத‌ கார‌ண‌த்தால் த‌விர்த்து கொண்டோம் இன்ஷா அல்லாஹ் அடுத்த‌ வ‌ருட‌ம் ஆடு, மாடு, ஒட்ட‌க‌ம் ஒரே இட‌த்தில் அருத்து ப‌ழியிட்டால் ஏழைக‌ளுக்கு முறையாக‌ விநியோக‌ம் செய்ய‌ப்ப‌டும் அத‌ற்கு அனைவ‌ருடைய‌ ஒத்துழைப்பு அவ‌சிய‌ம் மேலும் உங்க‌ள் க‌ருத்துக‌ளை உட‌னே நிர்வாகிக‌ளிட‌ம் தெரிய‌ப்ப‌டுத்தவும்







பேரணி & ஆர்ப்பாட்டம்


திருத்துறைப்பூண்டி செப்20: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் அரசு மருத்துவமனை சீர்கேட்டை கண்டித்து  ஆர்ப்பாட்டம் இன்று 20/9/2011 செவ்வாய் காலை 11 மணியிலிருந்து 12:30 வரை நடைப்பெற்றது முன்னதாக பேரணி மன்னைரோடு ரயில்வேகேட் அருகில் புறப்பட்டது இதில் 500 மேற்ப்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர் மாநில துணைத் தலைவர் கோவை ரஹீம் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர் மாவட்ட தலைவர் பா. அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தார் அனைத்து சமுதாய மக்களும் TNTJ பாராட்டினர்

கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைப்பெற்றது

1, குழந்தை நல மருத்துவர் இல்லாதது
2, எக்ஸ்ரே மிஷின் இருந்தும் பிலிம் இல்லாததால் தனியார் மருத்துவமனையை நாடும் ஏழைகள்
3, மின்சாரம் இல்லாத நேரத்தில் ஜெனரேட்டர் இயக்கப்படாமை
4, பன்றிகள் சுற்றித்திரிவதும், குப்பை அகற்றப்படாததாலும், சுகாதாரமற்ற கழிவறையாலும் நோய்கள் பரவும் அபாயம்
5, செவிலியர்களே மருத்துவம் செய்யும் அவலம்
6, பெண் நோயளிகளுக்கு ஈ.சி.ஜி எடுக்க ஆண் ஊழியகள் உள்ளதை கண்டித்து
7, கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும்
8, நோயளிகளுக்கு போதிய படுக்கறை வசதி செய்திட கோரி
9, குடித்தண்ணீர் வசதி செய்திடவும்
10, விபத்தில் காயமடைந்து வருபவர்களை இங்கே வசதியிருந்தும் திருவாரூர், தஞ்சை செல்லுமாறு அலைக்கழிப்பது

ஈத் பெருநாள் தொழுகை&பித்ரா2011

வரவு

உள்ளூர் வசூல் 19280
தலைமை மூலமாக 8000
வெளிநாடு 8000
மொத்தம் 35280

செலவு

1 நபர் ரூ 294
120 நபர் 35280

பொருள்கள்

அரிசி 10kg = Rs185
து.பருப்பு 1/2kg = Rs33
க்.பருப்பு 1/4 kg = Rs12
தெயிலை 25g = Rs 8
சீனி 1/2 kg = Rs15
சேமியா 170g = Rs10
ஆயில் 1/2 = Rs31

மொத்தம் Rs 294

குறிப்பு:

நமதூரில் உள்ள ஏழைகளுக்கு மட்டுமே விநியோகம் செய்யப்பட்டது



 

ரமலான் கடைசி 10 இரவு

இறைவனின் திருப்பெயரால்..

மிகவும் சிறப்புக்குறிய லைத்துல் கதுர் இரவை நாடி நமதூர் தவ்ஹீத் மர்கஸில் 22/8/2011 தினமும் 2:00 am முதல் சஹருடைய நேரம் 4:00am வரை இரவுத்தொழுகை நடைபெரும் சகோதர,சகோதரிகள் கலந்துக் கொண்டு புனித இரவை அடைந்து கொள்ளவும்
சஹர் உணவு ஏற்பாடு செய்யப்ப்ட்டுள்ளது

குறிப்பு:- இதற்க்கான செலவு குறைந்தபட்சம்  செலவாகிறது என்பதை தெரிவித்து கொள்வதோடு இந்த செலவினை பகிர்ந்து கொள்ளுங்கள். அல்லாஹ் மேன்மேளும் உங்களுக்கு பரக்கத்தும், ரஹ்மத்தும் செய்வானாக. ஆமீன்..







த‌வ‌றான‌ தொட‌ர்புக‌ளால் த‌ரிகெடும் ச‌முதாய‌ம்

இறைவ‌னின் திருப்பெயரால்...

"விப‌ச்சார‌த்திற்க்கு நெருங்காதீர்! அது வெட்க‌ கேடான‌தாக‌வும் தீய‌
வ‌ழியாக‌வும் இருக்கிற‌து"
(அல் குர்ஆன் 17:32)

அல்லாஹ் த‌ன் திரும‌றையில் விப‌ச்சார‌ம் செய்யாதீர்க‌ள் என்று மட்டும்
கூறாமல் அத‌ன் அருகில் கூட‌ நெருங்காதீர்க‌ள் என்று கூறுகிறான். இதில்தான் ந‌ம்
ச‌முதாய‌ம் க‌வ‌ன‌க்குறைவாக‌ செய‌ல்ப‌டுகின்ற‌து. விப‌ச்சார‌ம் யாரிட‌மும்
திடீரென ஏற்ப‌டும் ப‌ழ‌க்க‌ம‌ல்ல‌. ஒழுக்க‌முள்ள‌வர்க‌ளாக‌வும், இறைநம்பிக்கை
உள்ள‌வர்க‌ளாக‌வும் இருப்பார்க‌ள்.ஆனால் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ அந்த‌ கொடிய‌
வியாதி அவ‌ர்க‌ளை சென்ற‌டையும். கார‌ண‌ம் நாம் எவ்வ‌ள‌வு ஒழுக்க‌
சீல‌ர்க‌ளானாலும் ந‌ம்மை சுற்றிப் பிண்ண‌ப்ப‌ட்டுள்ள‌ இன்றைய‌ ந‌வீன‌ வ‌ச‌தி
வாய்ப்புக‌ளும் மார்க்க‌ அறிவில் ந‌ம் சமுதாய‌ம் பின்த‌‌ங்கி இருப்ப‌தாலும்
இக்கொடிய‌ செய‌லில் ந‌ம் சமுதாய‌ம் சிக்கிக்கொள்கிற‌து.

* "விபசாரத்தில் மனிதனுக்குள்ள‌ பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன்
அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல கண்ணும் நாவும் கூட
விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு
செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை
கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது
பொய்யாக்குகிறது"* இறைத்தூதர் ந‌பி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்ப‌வ‌ர் :அபூ ஹுரைரா(ரலி)
நூல் : புகாரி: 6243
நேர‌ம் பொன் போன்ற‌து என்ப‌து பழ‌மொழி ஆனால் பொன்(Gold) விலை ம‌திப்புள்ள‌து
நேர‌மோ விலை ம‌திப்பில்லாத‌து. அந்த‌ பொன்னான‌ நேர‌த்தை
தொலைக்காட்சியிலும், டிவி, சீரிய‌ல்க‌ள்,இசை நிக‌ழ்ச்சிக‌ள்,சினிமா பார்ப்ப‌து
போன்ற‌ இன்னும் ப‌ல வீணான விச‌ய‌ங்க‌ளிலும் கழிக்கின்றோம் இந்த‌ கேடுகெட்ட‌
அனைத்தும்தான் ந‌ம்மை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ ந‌ர‌க‌தின் ப‌க்க‌ம் இழுத்துச்
செல்கிற‌து ந‌ம் வீட்டு ம‌க்க‌ளுக்கு காத‌ல் என்ற‌ விப‌ச்சார‌த்தின் ம‌று
பெய‌ர் என்ன‌ வென்று கூட‌ தெரியாம‌ல் இருந்த‌து. ஆனால் இன்று திரும‌ண‌ம் ஆகாத‌,
திரும‌ண‌ம் ஆன ப‌ல‌ குழ‌ந்தைக‌ளுக்கு தயான‌ பின்பும் இந்த‌ கேடுகெட்ட‌ செய‌ல்
ந‌ம்மிடையே த‌லை விரித்தாடுகிற‌து ந‌ன்னட‌த்தை, நேர்மை ந‌பிக‌ளாரின் தூய‌
வ‌ழிக்காட்ட‌ல் மூலம் காட்டுத் தீயாய் ப‌ர‌விய‌ நம் மார்க்க‌ம் இன்று மாற்று
ம‌த ச‌கோத‌ர‌ர்க‌ளால் ந‌கைப்புக்கும்,கேலிக்கும் ஆளாகிவிட்ட‌து நம்
துர‌திஷ்ட‌மே!

திரும‌ண‌ம் ஆன‌வர்க‌ள் விப‌ச்சார‌த்தில் ஈடுப்ப‌ட்டால் அது ம‌ர‌ண‌
த‌ண்ட‌ணைக்கு உரிய‌ செயலாகும் ஆனால் நாம் வாழும் இந்த‌ நாட்டில் இஸ்லாமிய‌
குற்ற‌விய‌ல் ச‌ட்ட‌ப்ப‌டி த‌ண்ட‌ணை இல்லை என்ற‌ கார‌ண‌த்தினால் நாம் அத‌னுடைய‌
விப‌ரீத‌ம் அறியாம‌ல் செய‌ல்ப‌டுகிறோம். ஆனால் ப‌டைத்த‌வ‌ன் முன் மறுமையிலே
அர‌ச‌னானாலும், ஆண்டியானாலும் ஒரு அணுவைக்கூட‌ ந‌க‌ர்த்த‌ சக்தி
பெற‌மாட்டார்க‌ள் என்ப‌தை நாம் க‌வ‌ன‌த்தில் கொள்ள‌ வேண்டும் நாம் செய்கின்ற
இந்த‌ கேடுக்கெட்ட‌ செய‌லுக்கு இங்கு த‌ண்ட‌னை கிடைக்க‌வில்லை என்றால்
ம‌றுமையில் ந‌ம் நிலைமையை நினைத்து பாருங்க‌ள் !

நாம் வாழும் இவ்வுல‌கில் அர‌சாங்க‌த்தால் விதிக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு வ‌ழிமுறையை
மீறினால் குறிப்பிட்ட‌ த‌ண்ட‌னை கிடைக்கும்மென்று தெரிந்த‌ பிற‌கு அதிலிருந்து
நாம் தூர‌ வில‌கிவிடுகிறோம். அனால் அல்லாஹ் த‌ன் திருமறையில் க‌டுமையான
எச்ச‌ரிக்கை செய்த‌ ஒரு செய‌லை ந‌ம் ச‌முதாய‌ம் ச‌ர்வ‌சாதார‌ண‌மாக‌ செய்கிற‌து
என்றால் நாம் இந்த‌ கொடிய‌ செய‌லுக்கு ச‌வ‌ப்பெட்டி அடிப்ப‌த‌ற்கான‌ எந்த‌
முய‌ற்ச்சியும் மேற்கொள்ள‌வில்லை என்றுதான் பொருள். *இது போன்ற ஒரு
கேடுக்கெட்ட‌ செய‌ல் குறித்த‌ செய்தி ந‌ம்மிட‌ம் வ‌ரும்போது அதைப்பற்றி
க‌டுக‌ள‌வு கூட க‌வ‌லையோ, வெட்க‌மோ வ‌ராம‌ல் அதைப்ப‌ற்றி முழுமையாக‌
தெரிந்துகொள்வ‌த‌ற்க்கும்,அந்த‌ செய்தியை ந‌ம்மால் முடிந்த‌வ‌ரை
ப‌ர‌ப்புவ‌திலும்தான் முக்கிய‌ க‌வ‌ன‌ம் செலுத்துகிறோம்.* இந்த‌ அசிங்க‌ம் நம்
வீட்டிற்க்கு வ‌ர‌ வெகுதூர‌மில்லை என்ற‌ எதார்த்தம் தெரியாம‌ல் இருக்கிறோம்.

*என் அருமை ச‌முதாய‌மே!*

ந‌ம்மை சுற்றியிருக்கும் தீய‌ செய‌ல்க‌ளை க‌ளைந்து எறிய‌ வேண்டுமென்ற
முய‌ற்ச்சியை மேற்கொண்டோம் என்றால் எல்லாம் வ‌ல்ல‌ அல்லாஹ் அதில் வெற்றி பெற‌
நிச்சிய‌ம் உத‌வுவான். இந்த‌ தீய‌ செய‌ல்க‌ளிலிருந்து ந‌ம் ச‌முதாய‌த்தை காக்க‌
வேண்டுமென்றால் அத‌ற்க்கு ந‌ம‌தூரில் உள்ள‌ ஜ‌மாத்தார் அனைவ‌ர்க‌ளும்
ஒன்றுப்ப‌ட்டோ அல்ல‌து த‌னித்த‌னியாக‌வோ ஓர் தீர்வு காண‌ முன் வ‌ர‌வேண்டும்.
இத‌ற்கு தீர்வு ந‌ம் ச‌முதாய ம‌க்க‌ளுக்கு இறைய‌ச்ச‌த்தையும் ம‌றுமையில்
கிடைக்க‌ப்போகும் த‌ண்ட‌னையின் வேத‌னையையும் எடுத்துரைப்ப‌தைத் த‌விர‌ வேறு
வ‌ழியில்லை.இந்த‌ விப‌ச்சார‌ அசிங்க‌த்தை த‌டுக்க‌ வேண்டிய‌ பொறுப்பு முஸ்லிம்
என‌ மார்த‌ட்ட‌ கூடிய‌ ஒவ்வொரு இஸ்லாமிய‌ருக்கும் உண்டு. ந‌ன்மையை ஏவி தீமையை
த‌டுக்க‌ வேண்டிய‌ கட்டாய‌த்திற்கு த‌ள்ள‌ப்பட்டுள்ளோம்.

*தீர்வுக‌ள்:*
ஒவ்வொரு தெருவிலுள்ள‌ பெண்களை மாத‌ அம‌ர்வுகளாக‌ ஒன்று திர‌ட்டி ந‌ம்
ச‌முதாத்தில் நில‌வுகின்ற‌ அனைத்து சீர் கேடுக‌ளையும் க‌ளைய‌ அறிவுரைக‌ளை
எடுத்துறைக்க‌ வேண்டும்.

மார்க்க‌ப் ப‌ட்ட‌ங்க‌ளை பெற்ற‌ ந‌ம் ப‌குதியில் உள்ள‌ ஆலிமா பெண்க‌ள்
த‌ங்க‌ள‌து திரும‌ண பத்திரிக்கை‌ளில் ம‌ட்டும் போட்டுக் கொள்வ‌தோடு நிறுத்தி
கொள்ளாம‌ல் தாங்க‌ள் பெற்ற‌ அந்த‌ மார்க்க‌ க‌ல்வியை த‌ங்க‌ள் சகோத‌ரிக‌ளான
ந‌ம் ச‌முதாய‌ பெண்க‌ளுக்கு குர்ஆனையும், ஹ‌தீஸ்க‌ளையும் எடுத்து கூறி
அச்ச‌மூட்டி எச்ச‌ரிக்கை செய்ய‌ வேண்டும்.

*"உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள்
பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர்
தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப் படுவார்கள். ஓர் ஆண் மகன் தன்
குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும்
கேட்கப் படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள்
தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஓர் ஊழியன் தன்
முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தன்னுடைய பொறுப்பு பற்றி
விசாரிக்கப் படுவான்."* அறிவிப்ப‌வ‌ர் : இப்னு உமர்(ரலி) நூல்: புஹாரி: 893

ந‌ம‌தூரில் அனைத்து ப‌ள்ளிவாச‌ல்க‌ளிலும் ஜும்மா ப‌யான்க‌ளில்
விப‌ச்சார‌த்தின் விப‌ரீத‌ங்க‌ளை அச்ச‌மூட்டி எச்ச‌ரிக்க வேண்டும்.

அறிமுக‌மான‌ ந‌ம் சொந்த‌ ப‌ந்த‌ங்க‌ள் முன்பு வ‌ர‌ வெட்க‌ப்ப‌டும் ந‌ம்
ச‌முதாய‌ பெண்க‌ள் அன்னிய‌ ஆட‌வ‌ரோ, மாற்றும‌த‌ சகோத‌ர‌ர்க‌ள் முன்போ
வ‌ருவ‌த‌ற்கு வெட்க‌ப்படுவ‌தில்லை. ஆண்க‌ள் வீட்டில் இல்லாத‌ ச‌ம‌ய‌ங்க‌ளில்
அறிமுக‌மான‌வரானாலும் வேறு எவ‌ரானாலும் வீட்டினுல்லே அனும‌திக்க‌ கூடாது

ஒவ்வொரு குடும்ப‌த்திலுள்ள‌ பெண்க‌ளுக்கும் அக்குடும்ப‌த்திலுள்ள‌
ஆண்க‌ள்தான் பொறுப்பு. அந்த‌ வ‌கையில் நம் குடும்ப‌ பெண்க‌ளுக்கு அத்தியாவாசிய‌
தேவைக‌ளை த‌விர‌ செல்போன் வைத்திருக்க‌ அனும‌திக்க‌ கூடாது. அதிலும் குறிப்பாக‌
பள்ளி, க‌ல்லூரி மாண‌வ‌, மாண‌விக‌ளிட‌த்தில் செல்போன் கொடுப்ப‌தை பெற்றோர்க‌ள்
த‌விர்க்க‌ வேண்டும். அத்தியாவாசிய‌ தேவைக்காக‌ செல்போன் வைத்திருந்தால்
தொட‌ர்ந்து க‌ண்காணிக்க‌ வேண்டும்.

த‌விர்க்க‌ முடியாத‌ கார‌ண‌த்திற்க்காக‌ வெளியூர் செல்லும் ச‌கோத‌ரிக‌ள்
த‌குந்த‌ ஆண் துனையில்லாம‌ல் கார், ஆட்டோ போன்ற‌ வாக‌னங்க‌ளில் ப‌ய‌னிப்ப‌தை
அனும‌த்திக்கூடாது.

மாணவ‌, மாண‌விக‌ளுக்கு இணைய‌த‌ள வ‌ச‌திக‌ளை செய்து கொடுத்திருக்கும்
பெற்றோர். த‌ங்க‌ள‌து பிள்ளைக‌ள் க‌ம்பியூட்ட‌ர் இணைய‌ த‌ள‌த்தை
ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தை க‌வ‌ன‌மாக‌ க‌ண்காணிக்க‌ வேண்டும். எக்கார‌ண‌த்தைக்
கொண்டும் போட்டோ, போன் ந‌ம்ப‌ர், முக‌வ‌ரி போன்ற‌வ‌ற்றை இணைய‌த‌ள‌த்தில்
ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தை த‌டுக்க‌ வேண்டும்.

*"த‌ம‌து பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தம‌து க‌ற்புக‌ளைப்
பேணிக்காத்துக் கொள்ளுமாறும் ந‌ம்பிக்கை கொண்ட‌ பெண்க‌ளுக்கு கூறுவீராக‌!
அவ‌ர்க‌ள் தம‌து அலங்காரத்தில் வெளியே தெறிப‌வை த‌விர‌ ம‌ற்ற‌வ‌ற்றை
வெளிப்ப‌டுத்த‌ வேண்டாம்" *(அல் குர்ஆன் 24:31)

*பெண்க‌ள் சுவ‌ர்க‌ம் செல்ல‌ இல‌குவான வ‌ழி*

*"முஸ்லிமான‌ ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்;
க‌ட்டுப்படும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்;
அட‌க்க‌மாக‌ இருக்கும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும்,
பெண்களும்; தங்கள் கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும்,
பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் - ஆகியோருக்கு
அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்"* (அல்
குர்ஆன் 33:35)

மேற்கூறிய‌ திரும‌றை வ‌ச‌ன‌த்தில் ந‌ம்மை ப‌டைத்த‌ இறைவ‌ன் நாம்
சுவ‌ர்க்க‌ம் என்னும் ம‌திப்பிட‌ முடியாத‌ ப‌ரிசினை மிக‌ இல‌குவாக‌
அடைவ‌த‌ற்க்கு வ‌ழி காட்டுகிறான். அன்று ந‌ம் ச‌முதாய‌த்தில் சிறுவ‌ய‌திலேயே
பெண்ணுக்கு ம‌ண‌ம் முடித்தார்க‌ள். தாங்க‌ளே சிறுபிள்ளையாக‌ இருக்கும் பொழுதே
பெண்க‌ள் பிள்ளைக‌ளை பெற்றெடுத்து. அவ‌ர்க‌ளை ஒழுக்க‌மான‌ முறையில் வ‌ள‌ர்த்து
திரும‌ண‌மும் செய்து வைத்த‌ வ‌ர‌லாற்றிர்க்கு சொந்தக‌ர‌ர்க‌ளாகிய‌ நாம். இன்று
பெண் பிள்ளைக‌ளை மேற்ப‌டிப்பு ப‌டிக்க‌ வைத்து அழ‌கு பார்க்கும் அதே நேர‌த்தில்
இறைய‌ச்ச‌த்தை ஊட்டி வ‌ள‌ர்த்தோமா என்றால் நிச்சிய‌மாக‌ இல்லை என்ப‌துதான்
உண்மை.

இறைய‌ச்ச‌த்தை அதிக‌ம‌திக‌ம் போதிப்ப‌தால் ம‌ட்டும்தான் இம்மையிலும்
ம‌றுமையிலும் வெற்றிபெற முடியும் என்ப‌தை க‌வ‌ன‌த்தில் கொள்ள‌ வேண்டும்.
இஸ்லாம் பெண்க‌ளுக்கு நிறைய‌ உரிமைக‌ள் அளித்திருப்ப‌தை ந‌ம் ச‌முதாய‌ம்
த‌வ‌றாக‌ புரிந்து வைத்துள்ளார்க‌ள்.பெண்க‌ளின் உரிமையில் எந்த‌ மார்க்க‌மும்
சொல்லாத‌ அள‌விற்கு இஸ்லாம் தாராளமாக்கியுள்ள‌து. அதே நேர‌த்தில்
பாவ‌த்திற்க்கு த‌ண்ட‌னை என்றால் அல்லாஹ்வை போல் த‌ண்டிப்ப‌வ‌ன் எவ‌ருமில்லை
என்ப‌தையும் க‌வ‌ன‌த்தில் கொள்ள‌ வேண்டும்
ந‌பி (ஸ‌ல்) கூறினார்க‌ள் "*என‌க்கு சுவ‌ர்க‌ம்,ந‌ர‌க‌ம் எடுத்து
காட்ட‌ப்ப‌ட்ட‌து. ந‌ர‌க‌த்தில் அதிக‌ம் பெண்க‌ள் இருப்ப‌தை நான்
காண்டேன்"*என்று கூறினார்க‌ள். ந‌ம் ச‌முதாய‌ பெண்க‌ள் இதை அதிக‌மாக‌
சிந்திக்க‌
வேண்டும். மார்க்க‌த்தில் இல்லாத‌ ப‌ல செய‌ல்க‌ளை இறை வ‌ழிபாடு என்று
நினைத்துக்கொண்டு க‌ட‌மையான வ‌ண‌க்க‌த்திற்கு மேலாக‌ செய‌ல்ப‌டுகின்ற‌ன‌ர்
ப‌டைத்த‌ இறைவ‌ன் ம‌னித‌ர்க‌ளிலே ஒருவ‌ரை தூத‌ராக‌ தேர்ந்தெடுத்து அவ‌னுடைய‌
மார்க்க‌த்தை ந‌ம‌க்கு தூய்மையான முறையில் வாழ்ந்தும். க‌ற்றும் கொடுக்க‌
செய்திருக்கிறான். ஆனால் நாமோ ச‌த்திய‌ம் தெளிவாக இருந்தும் யார் மார்க்க‌ம்
என்ற‌ பெயரால் எதை சொன்னாலும் அது உண்மையா, ச‌ரியா, குர்ஆனிலோ, ஹ‌தீஸ்க‌ளிலோ
ஆதார‌ம் உள்ள‌தா என்று கூட‌ ஆராயாம‌ல் அவ‌ற்றை க‌டைப்பிடித்து ந‌ர‌க‌த்தை
நோக்கி விரைந்து செல்கிறோம்.

உல‌க க‌ல்வி என்ப‌து மிக‌வும் அவ‌சிய‌மானதுதான். அதே நேர‌த்தில் அந்த‌
க‌ல்வியை க‌ற்கும் முறை ச‌ரியா என்ப‌தை ஆராய‌ நாம் க‌ட‌மைப்ப‌ட்டுள்ளோம்.
ஆண்க‌ளும், பெண்க‌ளும் சேர்ந்து ப‌டிப்ப‌து இஸ்லாத்தில் அனும‌திக்க‌ப்படாத‌
ஒன்று அதை நாம் ச‌ர்வ‌ சாதார‌ண‌மாக‌ செய்து வ‌ருகிறோம். நாம் எவ்வ‌ளவுதான்
க‌ண்டிப்பாக‌வும். க‌ட்டுப்பாடோடும் இருந்தாலும் ஷைத்தான் ந‌ம் நாடி
ந‌ர‌ம்புக‌ளில்லெல்லாம் அம‌ர்ந்து வ‌ழிகெடுக்கிறான் என்ற‌ அல்லாஹ்வின் கூற்று
உண்மையாகும். ஆணும்,பெண்ணும் சேர்ந்து ப‌டிக்கும் ஆப‌த்தான விஷய‌ம் ந‌மதூரில்
நட‌பெற்று வ‌ருகிற‌து இத‌ற்கு முத‌லில் நாம் முற்றுப்புள்ளி வைக்க‌ வேண்டும்
உட‌ன‌டி ந‌ட‌வ‌டிக்கையாக‌ குறைந்த‌ப‌ட்ச‌ம் மாண‌வ‌, மாண‌விக‌ளுக்கு த‌னித்த‌னி
வ‌குப்புளாக‌ பிரித்து ந‌ட‌த்த‌ப்ப‌ட‌ வேண்டும்.

ஒவ்வொரு ஆண்மாக‌வும் சுவ‌ர்க‌ம் செல்வ‌தும், ந‌ர‌க‌ம் செல்வ‌தும்
அவ‌ர‌வ‌ர்க‌ள் செய‌ல்பாடுக‌ளில்தான் உள்ள‌து. ஒவ்வொரு பெற்றோர்க‌ளும்
அவ‌ர்க‌ள‌து பிள்ளைக‌ளின் வ‌ள‌ர்ப்பு ப‌ற்றி ம‌றுமையில் கேள்வி
கேட்க‌ப்ப‌டுவார்க‌ள். என‌வே நாமும் ந‌ம‌து பிள்ளைக‌ளும் அல்லாஹ்வின்
பொருத்த‌த்தை பெற்று ந‌ர‌க‌ம் என்னும் கொடிய‌ நெருப்பிலிருந்து த‌ப்பித்து
எந்த‌ க‌ண்ணும் க‌ண்டிராத‌ எந்த‌ செவியும் கேட்டிராத‌ எவ‌ர் க‌ற்ப‌னைக‌ளுக்கும்
எட்டிராத‌ அந்த‌ சுவ‌ர்க்க‌ சோலையில் நுழைய‌ வ‌ழிவகுக்க‌ வேண்டும்.

*முஸ்லிம் ச‌முதாய‌மே!*

இந்த‌ விஷ‌ய‌த்தை இத்தோடு ம‌ற‌ந்து விடாம‌ல் விப‌ச்சார‌ம் என்னும் இந்த‌
பாவ‌ச் செய‌லை த‌டுக்க நினைக்கும் ஆண்க‌ளும், பெண்க‌ளும், இமாம்க‌ள்,
நிர்வாகிக‌ள், க‌ல்வியாளர்க‌ள், ச‌மூக‌ சேவை அமைப்புக‌ள் என‌ அனைத்து
த‌ர‌ப்பின‌ரும் ஆக்க‌ப்பூர்வ‌மான ந‌ட‌வ‌டிக்கைக‌ளை எடுக்க‌ முன் வ‌ர‌
வேண்டும்.

ஒரு சில‌ர் செய்யும் இந்த‌ இழிசெய‌லால் ஒட்டுமொத்த‌ ச‌முதாய‌த்திற்கும்
த‌லைகுனிவை ஏற்ப‌டுத்துகிற‌து இந்த‌ இழி செய‌லை த‌டுக்கும் ந‌ட‌வ‌டிக்கைக‌ளில்
யாரும் எந்த‌ யோச‌னைக‌ள் தோன்றினாலும் அதை உட‌ன‌டியாக ந‌டைமுறைப‌டுத்த‌
முன்வ‌ர‌ வேண்டும் அதிலும் குறிப்பாக‌ குடும்ப‌த்தின‌ரை பிரிந்து
வெளிநாடுக‌ளில் வா‌ழும் ந‌ம‌து ச‌கோத‌ர‌ர்க‌ள் இந்த‌ அவ‌லத்திற்கு
ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வ‌லியுறுத்த‌ வேண்டும்.

சுவ‌ர்க்கத்தில் சிற‌ந்த‌ த‌ர‌ஜாவை அடைவ‌த‌ற்கு ஆண்க‌ள் ஜிஹாத் போன்ற‌
அற‌ப்போர் செய்ய‌ இஸ்லாம் வ‌லியுறுத்துகிற‌து. பெண்க‌ள் சுவ‌ன‌ம் செல்ல‌ மிக‌
இல‌குவான‌ வ‌ழியையே இஸ்லாம் கூருகிற‌து. த‌ன‌து க‌ற்பை காத்து க‌ண‌வ‌னுக்கு
நேர்மையாக‌ ந‌டக்கும் பெண்க‌ளுக்கு சுவ‌ர்க‌ம் செல்வ‌து
உறுதியாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

மேற்கூற‌ப்ப‌ட்ட‌ அனைத்தும் விஷ‌ய‌த்தின் சார‌ம்ச‌ம் இஸ்லாம் மார்க்க‌த்தில்
எம்பெருமானார் ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் சொல்,செய‌ல்,அங்கிகார‌த்தை ம‌ட்டுமே
பின்ப‌ற்றினாலேயே இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெற‌முடியும் நாம் வாழும்
இந்த‌ உல‌க‌ம் ஒரு சோதனைக்கூட‌ம்தான் இதில் வெற்றி தோல்வி ந‌ம் கையில்தான் உள்ள‌து.

இவ்வுல‌க‌ ந‌டைமுறையில் ஒரு காரிய‌த்தை செய்யும் பொழுது ப‌லமுறை விசாரித்து
அது ச‌ரிதானா என்று ஊர்ஜித‌ம் செய்த‌ பிற‌கு தான் செய்கிறோம். ஆனால் மார்க்க‌
விஷ‌ய‌ம் என்று வ‌ந்தால் அர‌பி பாஷை ச‌ரளமாக‌ பேச‌ தெரிந்து (ப‌ச்சை
த‌லைப்பாகையோடு) பெரிய‌ தாடி வைத்திருந்தால் போதும் அவ‌ர் பாத‌ள‌க்குழியில்
விழுந்தால் சுவ‌ர்க‌ம் செல்வோம் என்று சொன்னால் மறுப‌ரிசீல‌னை எதுவும்
செய்யாம‌ல் கூட்ட‌மாக‌ விழுவ‌தை காண்கிறோம்.

இந்த பிர‌சுர‌ம் வெளியிட‌ ஒரே கார‌ண‌ம் ந‌ம்மோடு ந‌ட்போடும் உறவோடும் ஒட்டி
உறவாடும் ந‌ம்முடைய‌ இஸ்லாமிய‌ ச‌கோத‌ர‌, ச‌கோத‌ரிக‌ள் ந‌ர‌க‌ம் எனும் கொடிய‌
நெருப்பில் விழுவ‌தை த‌டுப்ப‌தை த‌விர‌ வேரில்லை. யாரையும் த‌னிப்ப‌ட்ட‌
முறையில் புண்ப‌டுத்துவ‌த‌ற்கு அல்ல‌ என்ப‌தை அல்லாஹ் மீது அணையிட்டு கூறிக்
கொள்கிறோம். சிராத்துன் முஸ்த‌கீன் என்ற‌ நேர்வ‌ழியை பின்ப‌ற்றி நாம்
எல்லோருக்கும் சுவ‌ர்க்க‌ம் கிடைத்திட‌ எல்லாம் வ‌ல்ல‌ அல்லாஹ் அருள்
புர்வானாக‌! ஆமின்!!

* "அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன்
தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது
ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும்,
ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.
அவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும்
வேதனையைச் தாய‌ரித்துள்ளோம்.* (அல் குர்ஆன் 4:150)

பயான்

கட்டிமேடு கிளையின் சார்பில் வார வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் 5:00 மணியளவில் பெண்கள் பயான் நடைபெறுகிறது அனைவரும் வாரீர்
அல்லாஹ்வின் திருபெயாரால்....

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்...

இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 19/03/2011 சனிக்கிழமையன்று
மாலை 5 மணிக்கு பண்ணைய தெருவில்

மாபெரும் தவ்ஹீத் எழுச்சி பொதுக்கூட்டம்

நடைபெற உள்ளது.

சிறப்புரை:பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள்

(தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்-TNTJ கட்டிமேடு & ஆதிரங்கம்)

நமது ஊர் சகோதரர்கள் அனைவரும் கலந்துகொள்ளவும். தங்களது ஒத்துழைப்பு அவசியமான ஒன்றாக உள்ளது. நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அல்லாஹ்விடம் துஆ செய்யவும்.பொருளாதாரம் வசதி குறைவாக உள்ள காரணத்தினால் தாங்களால் முடிந்தவரை நிகழ்ச்சி சிறக்க பொருளாதார உதவி செய்யவும்.

மேலும் தொடர்புக்கு:

கட்டிமேடு சகோ. சாகுல்ஹமீது - 919659604545 (ஹமீது சுல்தான்- சாலை தெரு, கட்டிமேடு)
சகோ. A.K.F. ரஹ்மத்துல்லாஹ் (ஹஜரத் மருமகன்) - 91 9443874058 - ஆதிரங்கம்
திருத்துறைப்பூண்டி அப்துர்ரஹ்மான் - 91 9715188464

நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

மாபெரும் தவ்ஹீத் எழுச்சி பொதுக்கூட்டம்

நமதூரில் தவ்ஹீத் எழுச்சி மாநாடு நடத்துவது சம்பந்தமாக நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநாட்டை பொதுக்கூட்டமாக நடத்துவது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது ஆகையால் இன்ஷா அல்லாஹ் வருகின்ற மார்ச் 19தேதி "மாபெரும் தவ்ஹீத் எழுச்சி பொதுக்கூட்டம்" நடைபெறும்...

நமதூரில் தவ்ஹீத் எழுச்சி மாநாடு

விரைவில் (இன்ஷா அல்லாஹ்)

தவ்ஹீத் எழுச்சி மாநாடு

கட்டிமேட்டி & ஆதிரெங்கதில்

சத்தியம், அசத்தியம் ஒன்றா?

மக்களுக்கு விளக்க உங்கள் நன்கொடைகளை எங்களுக்கு அனுப்புங்கள்

தொடர்புக்கு 00919715188464