மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்

திருத்துறைப்பூண்டியில் தொழிலதிபர் வீட்டை அபகரிக்க முயற்சி: தே.மு.தி.க. வினர் மீது வழக்கு

திருத்துறைப்பூண்டி, பிப். 6-


சென்னை 21-05-2013 (செவ்வாய்க்கிழமை)



... திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு பகுதியை அப்துல் ஜலீல். தொழிலதிபர். இவருக்கு சொந்தமான வீடு திருத்துறைப்பூண்டி பெரிய கோவில் பகுதியில் உள்ளது. இந்த வீட்டை தே.மு.தி.க. அலுவலமாக பயன்படுத்த வாடகைக்கு கொடுத்து இருந்தார். இதனை தொடர்ந்து அங்கு தே.மு.தி.க. அலுவலகம் செயல்பட்டு வந்தது.



தற்போது அந்த வீடு தனக்கு தேவைப்படுவதாகவும் அதனை காலி செய்யும் படியும் தே.மு.தி.க. வினரிடம் தெரிவித்தார். ஆனால் அலுவலகத்தை காலி செய்ய மறுத்து வீட்டை அபகரித்து தன்னை தாக்க முயற்சி செய்ததாக தே.மு.தி.க.வினர் மீது அப்துல் ஜலீல் திருத்துறைப் பூண்டி போலீசில் புகார் செய்தார்.



இதன் பேரில் திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி. அப்பாசாமி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன், சப் -இன்ஸ்பெக்டர் பால சுப்பிரமணியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



திருத்துறைப்பூண்டி ஒன்றிய தே.மு.தி.க. செயலாளர் ஜமால், நகர செயலாளர் கந்தசாமி, பொருளாளர் சுங்லாந்தி சரவணன்,முன்னாள் நகர செயலாளரும் பொதுக்குழு உறுப்பினருமான என். எஸ். செந்தில் குமார், மற்றும் நிர்வாகிகள் ஆட்டூர் கண்ணன், சக்தி, பாரதி ஆகிய 7 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



இந்த சம்பவம் திருத்துறைப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுக்கூட்டம் வீடியோ வெளிவந்துவிட்டது 18/5/2013

அல்ஹம்துலில்லாஹ் 

கடந்த 18/5/2013 சனிக்கிழமை நமதூர் TNTJ கிளை சார்பாக மாபெரும் மார்க்க விளக்க
பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்டிமேடு வரலாற்றில் முதன் முறையாக நாம் தாம் இணையதளத்தில் நிகழ்ச்சியை  நேரடியாக ஒளிபரப்பு செய்தோம். அதை  உலகம் முழுக்க இருக்க கூடிய நம் சகோதரர்கள் கண்டுகளித்தனர்.   நிகழ்ச்சியை சில சகோதரர்கள் பார்க்க முடியவில்லை என்று வருத்தப்பட்டனர். அதனால்  முழுமையான வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். 

அதற்கான முகவரி : http://www.tntjthiruvarur.com/2013/05/blog-post_4171.html

இவண் 
TNTJ
கட்டிமேடு - ஆதிரெங்கம்

மார்க்க விளக்க பொதுக் கூட்டம்  18/5/13

கட்டிமேடு- ஆதிரங்கம் கிளை தலைவர் சேக் அப்துல்லா மற்றும் மாவட்ட கிளை  நிர்வாகிகள் தலைமையில்  > 18/5/2013 சனி கிழமை மாலை 6 மணிக்கு கட்டிமேட்டில்  மார்க்க விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. இதில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர்  அப்பாஸ் அலி அவர்கள் "இஸ்லாத்தில் மூல ஆதாரம் எது ?" என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்த பொதுகூட்டதிற்கு ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக 300 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

கட்டிமேட்டி​ல் மார்க்க விளக்க பொதுக்கூட்ட​ம் (18-5-2013​)

இன்று

இன்ஷா அல்லாஹ்  18-5-2013
 
திருவாரூர் மாவட்டம், கட்டிமேடு- ஆதிரங்கம் கிளை சார்பாக மார்க்க விளக்க பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் அப்பாஸ்அலி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வெளிநாட்டு சகோதரர்கள் இனையதளத்தில் பார்க்க நேரடி ஒளிப்பரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதற்கான தளத்திற்கு செல்ல
  இங்கே சொடுக்கவும் (Live) : www.tntjthiruvarur.com