மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்

தர்பியா

கட்டிமேடு & ஆதிரங்கம் கிளையின் சார்பில் 30/12/2012   (தர்பியா) நழ்ழொழுக்க பயிற்ச்சி முகாம் மாலை 4 மணி முதல் நடைபெற்றது . மாவட்ட பேச்சாளர் அப்துல் ஹமீது அவர்கள் மறுமை சிந்தனை மற்றும் ஜனாஸா தொழுகை  என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்

‘மாமனிதர் நபிகள் நாயகம்‘ புத்தகம் வினியோகம் : கட்டிமேடு மற்றும் ஆதிரங்கம்

திருவாரூர் மாவட்டம், கட்டிமேடு மற்றும் ஆதிரங்கம் கிளை சார்பாக கடந்த 16-12-2012 அன்று மாற்றுமத சகோதரருக்கு ‘மாமனிதர் நபிகள் நாயகம்‘ என்ற புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது.




இரத்ததான முகாம் : கட்டிமேடு & ஆதிரங்கம்


திருவாரூர் மாவட்டம், கட்டிமேடு மற்றும் ஆதிரங்கம் கிளை மற்றும் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி சார்பில் கடந்த 16-12-2012 அன்று நடைபெற்ற இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது. 

மாவட்ட மருத்துவரணி செயலாளர் முகம்மது மிஷ்கின் அவர்கள் தலைமையிலும், கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

தஞ்சை இரத்த வங்கி டாக்டர் கண்ணன் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட பேச்சாளர் மாலிக் அவர்களும், மாவட்ட பேச்சாளர் அப்துல் ஹமீது அவர்களும் இரத்ததானம் குறித்தும், இரத்தம் கொடுப்பதால் ஏற்ப்படும் நன்மைகள் குறித்தும் ஆர்வம் ஊட்டும் வகையில் பேசினர்.இம்முகாமில் பெண்கள் உட்பட 34 பேர் இரத்ததானம் கொடுத்தனர். அல்ஹம்துலில்லாஹ்...

ஒற்றுமைக்காக ஒரு முயற்சி

அன்புள்ள,
கட்டிமேடு & ஆதிரங்கம் சகோதர்களுக்கு அஸ்ஸாமு அழைக்கும் ( வரஹ் ),
தங்கள் ஆக்கங்களையும், கருத்துக்களையும் எங்களுக்கு அனுப்பி வையுங்கள்
ஒற்றுமைக்காக ஊர்க்காரர் ,நண்பர் , குடும்பத்தினர், இளைஞர்கள், பெரியவர், ஏழை, பனக்காரன் என்று சேர்ந்தால் மறுமையில் வெற்றி பெற முடியாது குரான் , ஹதிஸ் ஒளியில் இனைவோம் இன்ஷா அல்லாஹ் (இளைஞர்கள் இனைய தளங்கங்களில் வழிகெட்டு போவதை தடுக்கும் முயற்சி அஷ்தோபிருல்லாஹ் )

ஹ‌ஜ் பெருநாள் 2012

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இறைவனுடைய மாபெரும் கிருபையை கொண்டு ந‌ம‌தூரில் ஹ‌ஜ் பெருநாள் தொழுகை 27 /10 /2012 அன்று காலை ச‌ரியாக‌ 7:15 க்கு ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌து. TNTJ கிளை சார்பில் பண்ணைய தெருவில் மைதானத்தில் (திடலில்) நபி வழியில் சிறப்புடன் நடைபெற்றது. மழைக்காலம் என்பதால்
மக்கள் ம‌ழையையும் பொருட்ப‌டுத்தாம‌ல் ப‌ன்ணைய‌த்தெரு திட‌லை நோக்கி த‌ம‌து வீடுக‌ளிலிருந்து 6:00 ம‌ணிக்கே புற‌ப்ப‌ட்ட‌ன‌ர். அல்லாஹ்வுடைய‌ மாபெரும் கிருபையால் தொழுகைக்கு முன்பாக ம‌ழையும் நின்ற‌து. TNTJ ஜமாத் நிர்வாகிக‌ளும் மாற்று ஏற்ப்பாட்டுக்கும் யோசித்த‌ போது ம‌ழை நின்ற‌தை நினைத்து அல்லாஹ்வுக்கு ந‌ன்றி கூறிய‌வ‌றாக குறிப்பிட்ட‌ நேர‌த்தில் ஹ‌ஜ் பெருநாள் தொழுகையை ஆர‌ம்பித்த‌னர். இத்தொழுகையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 250க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்த பிறகு
திருவாரூர் மாவட்ட தாயி மரக்கடை பாட்சா அவ‌ர்க‌ள் பெருநாள் குத்பா உரை நிகழ்த்தினார். இந்த ஹ‌ஜ் பெருநாள் உரை வருகைதந்தவர்களுக்கு புதிய உற்ச்சாகத்தை தந்தது. நிகழ்ச்சியின் இறுதியில் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர் இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்டிமேடு & ஆதிரங்கம் சகோத‌ர‌ர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர் . (அல்ஹம்துலில்லாஹ்)

குர்பானியின் சட்டங்கள்

இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் சதகத்துல் பித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்கிய்யா எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.

குர்பானி கொடுக்கும் நாட்கள்:

குர்பானி கொடுக்க கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி (ஸல்) அர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலேயே யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என குறிப்பிட்டார்கள்.

அறிவிவப்ப்வர் பரா (ரலி)
நுல் புகாரி (955,5556)

இந்த ஹதீஸிலிருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் பெருநாள் தொழுகை நிறைவேற்றியதில் இருந்து தொடங்குகிறது. என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டுமின்றி ஹஜ்ஜுப் பெருநாளை தொடர்ந்து வரக்கூடிய 11,12,13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும். (பார்க்க அஹ்மத்-16151)

பெருநாள் தினத்தில் கொக்காதவர்கள் அதைத் தொடர்ந்து வரும் 3 நாட்களிலும் இந்தக் குர்பானியை கொடுத்துக் கொள்ளலாம்.

அறுக்கும் முறை:

குர்பானி பிராணியை அறுக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக் கூறி அறுத்து இருக்கிறார்கள்.

கால்கள், வயிறு, முகம் ஆகியவை கறுப்பாக அமைந்து உள்ள கொம்புள்ள ஓர் ஆட்டை வாங்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள். வாங்கி வரப்பட்டவுடன் ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பின்னர் அதைக் கல்லிலே தீட்டி கூர்மையாக்கு என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைப் பிடித்து அதைப் படுக்கையில் கிடத்தி அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ் என்று கூறிவிட்டு இவை இதை முஹம்மதிடம் இருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடம் இருந்தும் முஹம்மதின் சமுதாயத்திடமிருந்தும் ஏற்றுக் கொள்வாயாக எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் ஆயிஷா (ரலி)
நுல் முஸ்லிம் (3637)

முஸ்லிம் நுலில் மற்றொரு அறிவிப்பில் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறியதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது. எனவே அறுப்பவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பார் எனக் கூறி அறுக்க வேண்டும். அத்துடன் அறுக்கும் போது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது? என்று அபூஅய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார். இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர் காணக் கூடிய நிலை ஏற்பட்டு விட்டது என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் அதா பின் யஸார்,
நுல் திர்மிதி 1425, இப்னுமாஜா (3137) முஅத்தா (921)

எனவே ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தால் அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அதே சமயம் ஒன்றுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பதற்கு தடையேதும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகைளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேனங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.

அறிவிப்பவர் அலீ (ரலி)
நுல் புகாரி (1718)

ஒட்டகம், மாட்டுக்குரிய குர்பானி:

மாட்டையோ ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்க விரும்பினால் 7பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஓர் ஓட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம். ஒரு மாடு அல்லது ஓர் ஓட்டகம் 7 ஆடுகளுக்குச் சமமாக இஸ்லாத்தில் கருதப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டில் 7 பேர் சார்பாக ஓர் ஒட்டகத்தையும் 7 பேர் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுக்கச் செய்தனர்.

அறிவிப்பவர் ஜாபிர் (ரலி)
நுல் முஸ்லிம் (2323)

எனவே ஆட்டைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று கருதாமல் விரும்பினால் 7பேர் சேர்ந்து ஒரு மாட்டை குர்பானி கொடுக்கலாம். ஆட்டை குர்பானி கொடுத்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் இவர்களுக்குக் குறையாது என்பதை இந்த ஹதீஸில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்

விநியோகம் செய்தல்:

குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை 3நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் கட்டளையிட்டிருந்தார்கள். ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களிடம் நிலவிய வறுமை விலகி செழிப்பான நிலை ஏற்பட்ட பொழுது நீங்கள் உண்ணுங்கள் வேண்டுமென அளவு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். இது புகாரியில் இடம் பெற்றுள்ளது.

எனவே குர்பானி கொடுப்பவர்கள் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிற ஊர்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தர்கள், அதனுடைய இறைச்சி தோல் ஆகியவற்றை எல்லாம் விநியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை உரித்து அறுத்து பங்கிடக்கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் கட்டளை இட்டார்கள்.

அறிவிப்பவர் அலீ நுல் புகாரி. (1717)

இந்த ஹதீஸில் இருந்து அறுப்பவர்களுக்கு உரிப்பவர்களுக்கு தனியாகத் தான் கூலி கொடுக்க வேண்டுமே தவிர குர்பானி எந்த ஒரு பகுதியையும் கூலி என்ற அடிப்படையில் கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

குர்பானி கொடுக்கக் கூடியவர்கள் யாருக்கும் அதன் இறைச்சியை வழங்காமல் தாமே வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இது திருக்குர்ஆனின் க்டளைக்கு முரணானதாகும். அல்ஹஜ் 28வது வசனத்தில் அவற்றை நீங்களும் உண்ணுங்கள் வறிய ஏழைகளுக்கும் வழங்குகள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

எவ்வளவு உண்ணலாம் எவ்வளவு வழங்கலாம் என்ற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாவிட்டாலும் இறைவனுக்கு பயந்து நியாயமான முறையில் நமக்கு தேவையான அளவு மட்டும் நாம் எடுத்துக் கொண்டு எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

சில இடங்களில் குர்பானி இறைச்சியை பங்குகளாக வைத்து ஒரு பங்கு தங்களுக்கும் இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு நபி வழயில் எந்த ஆதாரமும் இல்லை.

குர்பானிப் பிராணிகள்:

ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவற்றை குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.

குர்பானிப் பிராணிகளின் தன்மைகள்:

நான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்கு ஏற்றவையவல்ல. வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருட்டுத் தன்மை. வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய், வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம். கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் துதரே கொம்பில் ஒரு குறை பல்லில் ஒரு குறை இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு மற்றவருக்கு அதை ஹராமாக்கி விடாதே என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் பரா (ரலி)
நுல் நஸயீ (4293)

இந்த ஹதீஸின் அடிப்படையில் வெளிப்படையாகத் தெரிக் கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியதில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

குர்பானிப் பிராணியின் வயது:

ஆடு, மாடு ஒட்டகம் ஆகிய முன்று பிராணிகளைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னர் நாம் அறிந்தோம். குர்பானிக்காகத் தேர்வு செய்யப்படும் பிராணிகள் குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.

நீங்கள் முஸின்னத் (இரண்டு வயதுடையது) தவிர வேறெதனையும் (குர்பானிக்காக) அறுக்காதீர்கள். உங்களுக்குச் சிரமமாக இருந்தால் தவிர அவ்வாறு சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் ஜத்அத் (பல்விழும் பருவத்தில் உள்ள) தை அறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பபவர் ஜாபிர் (ரலி)
நுல் முஸ்லிம் (3631)

குர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவை ஒருவர் குர்பானி கொடுப்பதற்காக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக் கூடாது. முடிகளை நீக்கக் கூடாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி)
நுல் நஸயீ (4285)

நாமே அறுக்க வேண்டும்:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் குர்பானி கொடுத்த போதுதமது கையால் தாமே அறுத்து இருக்கிறார்கள் என்று புகாரி முஸ்லிம் உட்பட பல நுல்களிலும் இடம் பெற்று உள்ளது. எனவே அறுக்கும் முறை தெரிந்தவர்கள் மற்றவர்களை வைத்து அறுக்காமல் தாமே அறுத்துக் கொள்வதே சிறந்ததாகும்.


தவ்ஹீத்வாதி என்று கூறலாமா ?




முஸ்லிம் என்ற வார்த்தை திருக்குர்ஆன் முழுவதும் குறிப்பிட்ட இயக்கத்தையோ மக்களையோ

குறிப்பதற்கான வார்த்தையாகப் பயன்படுத்தப்படவில்லை. மாறாக அது ஒரு பண்புப் பெயராகவே

பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.



சில அதிமேதாவிகள் முஸ்லிம்கள் தங்களுக்குள் இந்த வார்த்தையைத் தவிர வேறு எதையும்

...

சூட்டிக் கொள்ளக் கூடாது . இயக்கத்திற்கு பெயர்கள் வைக்கக் கூடாது என்று உளறி

வருகின்றனர். இவர்கள் இவ்வாறு உளறிய காரணத்தினால் இவர்கள் கூறியது போல் ஒற்றுமை

ஏற்படவில்லை. முஸ்லிமீன் என்ற பெயரில் பல இயக்கங்கள் ஏற்பட்டது தான் மிச்சம்.



அடையாளப் பெயருக்கும் பண்புப் பெயருக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் விளங்கிக் கொள்ள

வேண்டும்.



பண்புப் பெயருடன் இன்னொரு பெயர் இருந்தால் பண்புப் பெயரை மறுப்பதாக ஆகாது.



ஒருவர் மிகவும் பொறுமைத்தன்மை உடையவராக இருக்கின்றார். இந்தத் தன்மையின் காரணமாக

அவரை நாம் பொறுமைசாலி என்று குறிப்பிடுவோம். இது பொறுமை என்ற பண்பின் அடிப்படையில்

உருவான பெயராகும்.



அதே நேரத்தில் ஒருவருக்கு வெள்ளையன் என்று பெயர் சூட்டுகின்றோம். அவர் மிகவும்

கருப்பாக இருந்தாலும் அவரை வெள்ளையன் என்றே அழைப்போம். இது அவரை அடையாளப்

படுத்துவதற்காக வைக்கப்பட்ட குறிப்பான பெயராகும்.



திருக்குர்ஆனில் எந்த ஒரு இடத்திலும் முஸ்லிம் என்ற வார்த்தை அடையாளப் பெயராகப்

பயன்படுத்தப்படவில்லை. அது ஒரு பண்புப் பெயராகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.



முஸ்லிம் என்பது அடையாளப் பெயராக இருந்தால் சிலை வணங்கியைக் கூட முஸ்லிம் என்றே

குறிப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.



ஆதம் (அலை) அவர்கள் முதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை இறைவனுக்கு கட்டுப்பட்டு

வாழ்ந்த அனைவரையும் முஸ்லிம்கள் (இறைவனுக்கு கட்டுப்பட்டவர்கள்) என்றே அல்லாஹ்

குறிப்பிட்டுள்ளான்.



நூஹ் நபியவர்களை முஸ்லிம் என்றே அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.



فَإِنْ تَوَلَّيْتُمْ فَمَا سَأَلْتُكُمْ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى

اللَّهِ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ الْمُسْلِمِينَ (72)10



நீங்கள் புறக்கணித்தால் (அது பற்றி எனக்குக் கவலையில்லை.) நான் உங் களிடம் எந்தக்

கூலியையும் கேட்கவில்லை. என் கூலி அல்லாஹ்விடமே உள்ளது. நான் முஸ்லிமாக இருக்குமாறு

கட்டளையிடப் பட்டுள்ளேன்'' (என்றும் கூறினார்.)







அல்குர்ஆன் 10 : 72



இபுறாஹிம் நபி முஸ்லிமாக இருந்தார் என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.



مَا كَانَ إِبْرَاهِيمُ يَهُودِيًّا وَلَا نَصْرَانِيًّا وَلَكِنْ كَانَ حَنِيفًا

مُسْلِمًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ (67)3



இப்ராஹீம், யூதராகவோ, கிறித்தவராகவோ இருந்ததில்லை. மாறாக அவர் உண்மை வழியில் நின்ற

முஸ்லிமாக இருந்தார். இணை கற்பித்தவராக அவர் இருந்ததில்லை.



அல்குர்ஆன் (3:67)



இபுராஹிம் நபியவர்களும், இஸ்மாயில் நபியவர்களும் தம்மையும் தம்முடைய சந்ததிகளையும்

முஸ்லிம்களாக அதாவது இறைவனுக்குக் கட்டுப்படும் தன்மை கொண்டவர்களாக ஆக்க வேண்டும்

என அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.



رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً

لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ

الرَّحِيمُ (128) [البقرة/128]



''எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், (முஸ்லிம்களாகவும்) எங்கள்

வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் (முஸ்லிம்

சமுதாயமாகவும்) ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித்

தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்''

(என்றனர்.)



அல்குர்ஆன் 2:128



யாகூப் நபி தன்னுடைய பிள்ளைகளுக்கு முஸ்லிம்களாக மரணிக்க வேண்டும் என்றே உபதேசம்

செய்துள்ளார்கள்.



وَوَصَّى بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَا بَنِيَّ إِنَّ اللَّهَ

اصْطَفَى لَكُمُ الدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ (132) 2



''என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான்.

முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது'' என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது

பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர்



அல்குர்ஆன் 2:132



أَمْ كُنْتُمْ شُهَدَاءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ الْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا

تَعْبُدُونَ مِنْ بَعْدِي قَالُوا نَعْبُدُ إِلَهَكَ وَإِلَهَ آَبَائِكَ

إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِلَهًا وَاحِدًا وَنَحْنُ لَهُ

مُسْلِمُونَ (133) 2



யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? ''எனக்குப்

பின் எதை வணங்குவீர்கள்?'' என்று தமது பிள்ளைகளிடம் அவர் கேட்ட போது ''உங்கள்

இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய

ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்'' என்றே (பிள்ளைகள்)

கூறினர்.



அல்குர்ஆன் 2 : 133



மூஸா நபியின் சமுதாயத்தையும் முஸ்லிம்கள் என்றே திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது



وَقَالَ مُوسَى يَا قَوْمِ إِنْ كُنْتُمْ آَمَنْتُمْ بِاللَّهِ فَعَلَيْهِ

تَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُسْلِمِينَ (84)10



''என் சமுதாயமே! நீங்கள் அல்லாஹ்வை நம்பி, முஸ்லிம்களாக இருந்தால் அவனையே

சார்ந்திருங்கள்!'' என்று மூஸா கூறினார்.



சூனியக்காரர்கள் தாங்கள் ஈமான் கொண்டவுடன் நாங்கள் முஸ்லிம்களாகி விட்டோம் என்றே

கூறினார்கள்.



وَمَا تَنْقِمُ مِنَّا إِلَّا أَنْ آَمَنَّا بِآَيَاتِ رَبِّنَا لَمَّا جَاءَتْنَا

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ (126)7



''எங்கள் இறைவனின் சான்றுகள் எங்களிடம் வந்த போது அதை நம்பினோம் என்பதற்காகவே

எங்களை நீ தண்டிக்கிறாய்'' (என்று ஃபிர்அவ்னிடம் கூறி விட்டு) ''எங்கள் இறைவா!

எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக!''

என்றனர்



அல்குர்ஆன் 7 : 126



அல்குர்ஆன் 10 : 84



பிர்அவ்ன் மூழ்கடிக்கப்படும் போது தான் முஸ்லிம்களில் ஒருவனாகி விட்டேன் என்று

கூறினான்.



وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ

وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آَمَنْتُ

أَنَّهُ لَا إِلَهَ إِلَّا الَّذِي آَمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ

الْمُسْلِمِينَ (90)10



இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும்

அக்கிரமமாகவும், அநியாய மாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன்

மூழ்கும் போது ''இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு

யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம்களில் ஒருவன்'' என்று கூறினான்.



அல்குர்ஆன் 10 : 90



ஈஸா (அலை) அவர்களின் உதவியாளர்களும் முஸ்லிம்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர்.



فَلَمَّا أَحَسَّ عِيسَى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ أَنْصَارِي إِلَى اللَّهِ

قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنْصَارُ اللَّهِ آَمَنَّا بِاللَّهِ وَاشْهَدْ

بِأَنَّا مُسْلِمُونَ (52) 3



அவர்களிடம் (இறை) மறுப்பை ஈஸா உணர்ந்த போது ''அல்லாஹ்வுக்காக எனக்கு உதவுவோர்

யார்?'' என்று கேட்டார். (அவரது) அந்தரங்கத் தோழர்கள், ''நாங்கள் அல்லாஹ்வின்

உதவியாளர்கள். அல்லாஹ்வை நம்பினோம். நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே

சாட்சியாக இருங்கள்'' என்றனர்.



அல்குர்ஆன் 3 : 52



நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்தையும் அல்லாஹ் முஸ்லிம்கள் என்றே

குறிப்பிட்டு்ள்ளான்.



يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا

تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ (102)3



நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள்

முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்!



அல்குர்ஆன் 3 : 102



قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

(162) لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ (163)6



''எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின்

இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப்

பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்'' என்றும் கூறுவீராக



அல்குர்ஆன் 6 : 162, 163



மேற்கண்ட வசனங்களிலிருந்து இருந்து அனைத்து நபிமார்களின் சமுதாயமும் முஸ்லிம்களே

என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.



நபிகள் நாயகம் அவர்களுடைய சமுதாயத்திலும் முந்தைய நபிமார்களின் சமுதாயத்திலும்

இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் தன்மை கொண்ட மக்களை முஸ்லிம்கள் என்றே

குறிப்பிட்டதாக அல்லாஹ் 22 : 78 வசனத்தில் கூறுகின்றான்.







உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச்

சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு முன்னரும் இதிலும் அவனே உங்களுக்கு

முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான்



அல்குர்ஆன் 22 : 78



முஸ்லிம் என்ற வார்த்தையை தனக்குக் கட்டுப்படும் மக்களுக்கு அல்லாஹ்

குறிப்பிட்டுள்ளான். இது பண்பின் அடிப்படையில் வைக்கப்பட்ட பெயர்தான். இது ஒரு

அடையாளப் பெயராக இருக்குமென்றால் முஸ்லிம் என்ற வார்த்தையை விட ஒரு வார்த்தையைக்

கூட்டுவதோ குறைப்பதோ கூடாது.



இது ஒரு பண்புப் பெயராக இருப்பதின் காரணத்தினால் தான் நபியவர்கள் முஸ்லிம் என்ற

வார்த்தையுடன் இன்னும் சில வார்த்தைகளைச் சேர்த்து அல்லாஹ் வைத்த பெயர் என்று

கூறியுள்ளார்கள்.







2790 قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا آمُرُكُمْ

بِخَمْسٍ اللَّهُ أَمَرَنِي بِهِنَّ السَّمْعُ وَالطَّاعَةُ وَالْجِهَادُ

وَالْهِجْرَةُ وَالْجَمَاعَةُ فَإِنَّهُ مَنْ فَارَقَ الْجَمَاعَةَ قِيدَ شِبْرٍ

فَقَدْ خَلَعَ رِبْقَةَ الْإِسْلَامِ مِنْ عُنُقِهِ إِلَّا أَنْ يَرْجِعَ وَمَنْ

ادَّعَى دَعْوَى الْجَاهِلِيَّةِ فَإِنَّهُ مِنْ جُثَا جَهَنَّمَ فَقَالَ رَجُلٌ

يَا رَسُولَ اللَّهِ وَإِنْ صَلَّى وَصَامَ قَالَ وَإِنْ صَلَّى وَصَامَ فَادْعُوا

بِدَعْوَى اللَّهِ الَّذِي سَمَّاكُمْ الْمُسْلِمِينَ الْمُؤْمِنِينَ عِبَادَ

اللَّهِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ رواه الترمدي



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு ஐந்து விஷயங்களை

ஏவுகின்றேன். அல்லாஹ் அவற்றைக் கொண்டு எனக்கு கட்டளையிட்டான். அவையாவன:

செவிதாழ்த்துதல், கட்டுப்படுதல், ஜிஹாத் செய்தல், ஹிஜ்ரத் செய்தல், அல்ஜமாஅத் எனும்

கூட்டமைப்பாக இருத்தல். ஏனெனில் யார் இஸ்லாமிய (அரசான) கூட்டமைப்பை ஒரு சாண் அளவு

பிரிந்து செல்கிறானோ அவன் தனது கழுத்திலிருந்து இஸ்லாத்தின் (ஒப்பந்தமான)

வளையத்தைக் கழற்றி விட்டான். அவன் மீண்டும் திரும்பி வந்தாலே தவிர. எவன்

அறியாமைக்கால அழைப்பை அழைக்கின்றானோ அவன் நரகத்தின் கொள்ளிக்கட்டையாவான் என்று

கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே அவன் தொழுதாலும் நோன்பு

நோற்றாலுமா? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் அவன் தொழுதாலும் நோன்பு

நோற்றாலும்தான் என்று கூறிவிட்டு அல்லாஹ்வுடைய அழைப்பைக் கொண்டே நீங்கள் அழைத்துக்

கொள்ளுங்கள் அவன் உங்களுக்கு அல்முஸ்லிமீன், அல்முஃமினீன், இபாதல்லாஹ் என்று பெயர்

சூட்டியுள்ளான் என்று கூறினார்கள்.



அறிவிப்பவர் : அல்ஹாரிஸ் (ரலி)



நூல் : திர்மிதி (2790)



அஹ்மத் 21835 வது ஹதீஸில் இபாதல்லாஹ், அல்முஃமினீன், அல் முஸ்லிமீன் என்ற அல்லாஹ்

பெயர் சூட்டினான் என நபியவர்கள் கூறியதாக வந்துள்ளது.



அறியாமைக் காலத்தில் பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வார்த்தைகளைப்

பயன்படுத்தி அழைக்கும் பழக்கம் இருந்தது. இஸ்லாம் அதனை உடைத்தெறிந்தது.



அல்லாஹ்வின் அடியார்கள் மத்தியில் பிறப்பினால் உயர்வு தாழ்வு கிடையாது. அனைவரும்

இபாதல்லாஹ் (அல்லாஹ்வின் அடியார்கள்) அல்முஸ்லிமீன் (கட்டுப்பட்டவர்கள்)

அல்முஃமினீன் (இறைநம்பிக்கையாளர்கள்) என்று தான் முஸ்லிம்கள் தங்களுக்குள்

குறிப்பிட வேண்டும் என நபியவர்கள் போதித்தார்கள்.



முஸ்லிம்களாக இருப்பவர்கள் பெயரினால் உயர்வு தாழ்வு கற்பிக்காமல் தங்களுக்குச் சில

பண்புகளின் அடிப்படையில் அடையாளப் பெயர்களைப் பயன்படுத்துவது மார்க்கத்திற்கு

எதிரானது அல்ல.



நபிகள் நாயகம் ஸல் அவர்களின் சமுதாயத்துக்கு மட்டுமின்றி முந்தைய சமுதாயத்தில்

நபிமார்கள் வழியில் நடந்தவர்களையும் முஸ்லிம்கள் என்றே அல்லாஹ் கூறியுள்ளதை முன்னர்

எடுத்துக் காட்டியுள்ளோம். யாரை முஸ்லிம் என்று அல்லாஹ் குறிப்பிட்டானோ அவர்களை

வேறு பெயர்களிலும் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.







நம்பிக்கை கொண்டோரிலும், யூதர்களிலும், கிறித்தவர்களிலும், ஸாபியீன்களிலும்

அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி

அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும்

மாட்டார்கள்.



திருக்குர்ஆன் : 2:62







நம்பிக்கை கொண்டோரிலும், யூதர்களிலும், ஸாபியீன்களிலும், கிறித்தவர்களிலும்

அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி நல்லறங்களைச் செய்தோருக்கு எந்த அச்சமும்

இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.



திருக்குர்ஆன் : 5:69



மேற்கண்ட இரண்டு வசனங்களில் யஹூதிகள் எனும் யூதர்கள், நஸாரா எனும் கிறித்தவர்கள்,

சாபியீன்கள் ஆகியோரில் அல்லாஹ்வை சரியான முறையில் நம்பிக்கை கொண்டிருந்தால்

அவர்களுக்கு மறுமையில் சொர்க்கம் உண்டு என்று அல்லாஹ் கூறுகிறான்.



இந்தத் தன்மையில் உள்ள அனைவரும் முஸ்லிம்கள் தான் என்பதற்கான ஆதாரங்களை முன்னர்

நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். அதாவது அவர்கள் அனைவரும் முஸ்லிம்களாக இருந்தும்

அவர்கள் தமக்குச் சூட்டிக் கொண்ட பெயரால் அல்லாஹ் அடையாளம் காட்டுகிறான்.



சாபியீன்கள் என்ற பெயர் அல்லாஹ் சூட்டிய பெயர் அல்ல. மக்களாகச் சூட்டிக் கொண்ட

பெயர் ஆகும். ஆனாலும் அவர்கள் அந்தப் பெயரில் குறிப்பிடப்பட்டதால் முஸ்லிம் என்ற

பெயருக்கு எந்தப் பங்கமும் ஏற்படவில்லை. இவர்கள் சாபியீன்கள் என்று அல்லாஹ் வைக்காத

வேறு பெயர் வைத்துக் கொண்ட்தால் அவர்கள் குற்றவாளிகள் என்று கூறாமல் சொர்க்கவாசிகள்

என்று அல்லாஹ் கூறுகிறான்.



மேலும் அல்லாஹ் அனைத்து நபிமார்களுடைய சமுதாயத்திற்கும் முஸ்லிம்கள் என்று பெயர்

சூட்டியிருந்தாலும் அவர்களுக்குரிய அடையாளப் பெயர்களைக் கொண்டும் அல்லாஹ்

அழைத்துள்ளான்.



அஹ்லுல் கிதாப், அஸ்ஹாபுல் உஹ்தூத், யகூதிகள், நஸராக்கள், பனீஇஸ்ரவேலர்கள்

என்றெல்லாம் திருக்குர்ஆனில் முந்தைய சமுதாயத்திற்குரிய அடையாளப் பெயர்களை அல்லாஹ்

குறிப்பிட்டுள்ளான். இந்தப் பெயர்களில் முந்தைய சமுதாயத்தைச் சார்ந்த முஸ்லிம்களும்

அடக்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது.



அது போன்று காஃபிர்களையும் அவர்கள் வசித்த இடம், செய்த பாவம் ஆகியவற்றை

அடிப்படையாகக் கொண்டு தோப்புவாசிகள், சனிக்கிழமைவாசிகள் என்பது போன்ற அடையாளப்

பெயர்களைக் கொண்டு அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.



நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் மதீனா ஸஹாபாக்கள் அன்சாரிகள் என்றும்

மக்கா ஸஹாபாக்கள் முஹாஜிர்கள் என்றும் நபியவர்கள் காலத்திலேயே

அழைக்கப்பட்டுள்ளார்கள்.



முஸ்லிம்கள் என்றுதான் அழைக்க வேண்டும் . அன்சாரிகள், முஹாஜிர்கள் என்ற குறிப்பிடக்

கூடாது என அல்லாஹ்வும் தடுக்கவில்லை. நபிகள் நாயகமும் தடைவிதிக்கவில்லை. முஹாஜிர்

என்று சொன்னதால் முஸ்லிம் என்ற பண்புப் பெயரை மறுத்த்தாக அவர்கள் ஆகவில்லை.



மாறாக அல்லாஹ்வே திருமறைக் குர்ஆனில் அன்சாரிகள் முஹாஜிர்கள் என்று பெயர்

வைத்துள்ளான்.



وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ

اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ

لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ

الْفَوْزُ الْعَظِيمُ (100)9



முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில்

அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும்

அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து

வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள்

என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.



அல்குர்ஆன் 9 : 100



قَدْ تَابَ اللَّهُ عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ الَّذِينَ

اتَّبَعُوهُ فِي سَاعَةِ الْعُسْرَةِ مِنْ بَعْدِ مَا كَادَ يَزِيغُ قُلُوبُ

فَرِيقٍ مِنْهُمْ ثُمَّ تَابَ عَلَيْهِمْ إِنَّهُ بِهِمْ رَءُوفٌ رَحِيمٌ (117) 9



இந்த நபியையும், முஹாஜிர்களையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில்

ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில்

அவரைப் பின்பற்றியவர்களையும் மன்னித் தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்;

இரக்கமுடையோன்



அல்குர்ஆன் 9 : 117



அல்லாஹ்வே தங்களுக்கு அன்சாரிகள் என்று பெயர் சூட்டினான் என அனஸ் (ரலி) அவர்கள்

குறிப்பிட்டுள்ளார்கள்.



ஃகைலான் பின் ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:



நான் அனஸ் (ரலி) அவர்களிடம், (அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் குலத்தாரான உங்களுக்கு)

அன்சார்-உதவியாளர்கள்' என்னும் பெயர் வந்ததைப் பற்றி எனக்குக் கூறுங்கள்.

உங்களுக்கு அந்தப் பெயர் (குர்ஆனுக்கு முன்பே) சூட்டப்பட்டிருந்ததா? அல்லது அல்லாஹ்

உங்களுக்கு அந்தப் பெயரைச் சூட்டினானா? என்று கேட்டேன். அவர்கள், அல்லாஹ் தான்

எங்களுக்கு (அன்சார்' என்று திருக்குர்ஆன் 9:100ஆம் வசனத்தில்) பெயர் சூட்டினான்

என்று குறிப்பிட்டார்கள்



நூல் : புகாரி 3776



முஸ்லிம்களாக இருந்தவர்களுக்கு அல்லாஹ் அன்சாரிகள் என்றும் முஹாஜிர்கள் என்றும்

பெயர் சூட்டியதிலிருந்தே முஸ்லிம்கள் தங்களுக்குள் சில பெயர்களைச் சூட்டிக் கொள்வது

தவறில்லை என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.



அது போன்று ஸஹாபாக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அஸ்ஹாபுஸ் சுஃப்ஃபா “திண்ணை

ஸஹாபாக்கள்“ என்று அழைக்கப்பட்டுள்ளார்கள்.



குர்ஆனை நன்றாக ஓதக்கூடியவர்கள் குர்ராக்கள் என்று அழைக்கப்பட்டுள்ளனர்.



முஸ்லிம் என்று மட்டும்தான் குறிப்பிட வேண்டும் என்று இருந்தால் இவ்வாறு

அழைப்பதற்கு நபியவர்கள் அனுமதித்திருக்க மாட்டார்கள்.







இன்றைக்கு முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் இணைவைப்புக் காரியங்களில் மூழ்கி உள்ள

காரணத்தினால் மக்களுக்கு தவ்ஹீத் கொள்கையை எடுத்துரைக்க வேண்டும், ஓரிறைக் கொள்கை

உடைய மக்களை ஒன்றிணைத்து செயல்படுவதின் மூலம் மார்க்க ரீதியிலான சில பலன்களை அடைய

முடியும் என்ற அடிப்படையிலேயே தவ்ஹீத் வாதிகள், தவ்ஹீத் ஜமாஅத் என்ற வார்த்தை

பயன்படுத்தப்படுகிறது.









தவ்ஹீத்வாதி என்ற சொல்லே குர்ஆன் ஹதீஸில் இல்லை. எனவே இவ்வாறு அடையாளப் பெயர்

இடுவது கூடாது என்று சிலர் சமுதாயத்தில் உளறி வருகின்றனர். அரபு மொழியைப் பற்றியும்

குர்ஆன் ஹதீஸைப் பற்றியும் ஞானம் இல்லாதவர்கள் தான் இப்படிப்பட்ட தவறான வாதத்தை

வைத்து வருகின்றனர்.



குர்ஆனையும் நபிமொழிகளையும் படிக்கும் ஒருவர் தவ்ஹீத் என்ற சொல் அவ்விரண்டிலும்

பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிந்து கொள்வார்.



அல்லாஹ் தன்னைப் பற்றி குர்ஆனில் வாஹித் (ஒருவன்) என்றும் வஹ்தஹு (அவன் தனித்தவன்)

என்றும் பல இடங்களில் கூறுகின்றான்.



وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا إِلَهًا وَاحِدًا لَا إِلَهَ إِلَّا هُوَ

سُبْحَانَهُ عَمَّا يُشْرِكُونَ(31)9



ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர

வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன்

தூயவன்.



அல்குர்ஆன் (9 : 31)



இந்த வசனத்தில் ஒரே என நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் வாஹித் என்ற அரபுச் சொல்

இடம்பெற்றுள்ளது. வஹ்த் என்ற சொல்லிருந்து பிரிந்து வந்தவை தான் வாஹித் தவ்ஹீத்

என்ற வார்த்தைகள்.



தவ்ஹீத் என்றால் இறைவன் ஒருவன் எனக் கூறுதல் என்பது பொருள். தவ்ஹீத்வாதி என்றால்

ஒரே இறைவனை நம்பக்கூடியவன் என்பது பொருள். லாயிலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன்

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்ற கலிமாவின் சுருக்கமாகவும் இஸ்லாம் என்ற

வார்த்தையின் மாற்றுச் சொல்லாகவும் தவ்ஹீத் என்ற சொல் உள்ளது.



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லாயிலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்

தவிர வேறு இறைவன் இல்லை) என்ற இஸ்லாமியக் கொள்கையை குறிக்க தவ்ஹீத் என்ற

சொல்லிலிருந்து பிரிந்து வரும் யுவஹ்ஹிது என்ற வார்த்தையைப்

பயன்படுத்தியுள்ளார்கள். இதைப் பின்வரும் செய்திகள் தெளிவுபடுத்துகின்றன.



7372 و حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الْأَسْوَدِ حَدَّثَنَا الْفَضْلُ

بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ عَنْ يَحْيَى بْنِ

مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ أَنَّهُ سَمِعَ أَبَا مَعْبَدٍ

مَوْلَى ابْنِ عَبَّاسٍ يَقُولُ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ لَمَّا بَعَثَ

النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعَاذَ بْنَ جَبَلٍ إِلَى نَحْوِ

أَهْلِ الْيَمَنِ قَالَ لَهُ إِنَّكَ تَقْدَمُ عَلَى قَوْمٍ مِنْ أَهْلِ الْكِتَابِ

فَلْيَكُنْ أَوَّلَ مَا تَدْعُوهُمْ إِلَى أَنْ يُوَحِّدُوا اللَّهَ تَعَالَى

فَإِذَا عَرَفُوا ذَلِكَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ

خَمْسَ صَلَوَاتٍ فِي يَوْمِهِمْ وَلَيْلَتِهِمْ فَإِذَا صَلَّوْا فَأَخْبِرْهُمْ

أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ زَكَاةً فِي أَمْوَالِهِمْ تُؤْخَذُ مِنْ

غَنِيِّهِمْ فَتُرَدُّ عَلَى فَقِيرِهِمْ فَإِذَا أَقَرُّوا بِذَلِكَ فَخُذْ

مِنْهُمْ وَتَوَقَّ كَرَائِمَ أَمْوَالِ النَّاسِ رواه البخاري



இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :



நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு

அனுப்பிய போது அவர்களிடம், "நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம்

செல்கின்றீர்கள். ஆகவே, அவர்களுக்கு முதலாவதாக, (அல்லாஹ் ஒருவன் எனும்) ஓரிறைக்

கொள்கையை ஏற்கும்படி அழைப்புக் கொடுங்கள். அதை அவர்கள் புரிந்து(ஏற்றுக்) கொண்டால்,

தினந்தோறும் ஐந்து நேரத் தொழுகைகளை அவர்கள் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று

அவர்களிடம் தெரிவியுங்கள்.



புகாரி (7372)



19 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ الْهَمْدَانِيُّ

حَدَّثَنَا أَبُو خَالِدٍ يَعْنِي سُلَيْمَانَ بْنَ حَيَّانَ الْأَحْمَرَ عَنْ

أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ عَنْ ابْنِ عُمَرَ عَنْ

النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بُنِيَ الْإِسْلَامُ عَلَى

خَمْسَةٍ عَلَى أَنْ يُوَحَّدَ اللَّهُ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ

وَصِيَامِ رَمَضَانَ وَالْحَجِّ فَقَالَ رَجُلٌ الْحَجُّ وَصِيَامُ رَمَضَانَ قَالَ

لَا صِيَامُ رَمَضَانَ وَالْحَجُّ هَكَذَا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى

اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه مسلم



"இஸ்லாம் (எனும் மாளிகை) ஐந்து (தூண்கள்) மீது எழுப்பப்பட்டுள்ளது. அவை: 1. (இறைவன்

ஒருவன் எனும்) ஓரிறைக் கொள்கை. 2. தொழுகையைக் கடைப் பிடிப்பது. 3. ஸகாத் வழங்குவது.

4. ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது. 5. ஹஜ் செய்வது என்று நபி (ஸல்) அவர்கள்

கூறினார்கள்''



அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)



நூல் : முஸ்லிம் (19)



கோபித்துக் கொண்டான் என்று ஒரு நூலில் பயன்படுத்தப்பட்டால் கோபம் என்பது அந்த

நுலில் இல்லை எனக் கூற முடியாது. கோபித்துக் கொண்டான் என்பதில் கோப்ம அடக்கமாக

உள்ளது. அது போல் தான் யுவஹ்ஹிது என்ற சொல்லுக்குள்ளும், யுவஹ்ஹிதூ என்ற சொல்லுக்கு

உள்ளேயும் தவ்ஹீத் எனும் சொல் அடங்கியுள்ளது என்பதை அறிவு படைத்த மக்கள் அறிந்து

கொள்வார்கள்.



தவ்ஹீத் என்ற சொல் நேரடியாகவும் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.



2137 وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَظْهُرِنَا

وَعَلَيْهِ يَنْزِلُ الْقُرْآنُ وَهُوَ يَعْرِفُ تَأْوِيلَهُ وَمَا عَمِلَ بِهِ

مِنْ شَيْءٍ عَمِلْنَا بِهِ فَأَهَلَّ بِالتَّوْحِيدِ لَبَّيْكَ اللَّهُمَّ

لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ

لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ وَأَهَلَّ النَّاسُ بِهَذَا الَّذِي يُهِلُّونَ

بِهِ رواه مسلم



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜில்) "லப்பைக். அல்லாஹும்ம லப்பைக். லப்பைக்

லா ஷரீக்க லக்க லப்பைக். இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக். வல்முல்க லா ஷரீக்க லக் (இதோ,

உன் அழைப்பேற்று வந்து விட்டேன் இறைவா! உன் அழைப்பேற்று வந்துவிட்டேன். உனக்கே நான்

கீழ்ப்படிகி றேன். உனக்கு இணை யாருமில்லை. உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும்

ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையாளர் எவரு மில்லை)'' என்று தவ்ஹீதுடன்

தல்பியாச் சொன்னார்கள்.



அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)



நூல் : முஸ்லிம் (2334)



3597 حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْحَاقَ أَنْبَأَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ

عَاصِمِ بْنِ بَهْدَلَةَ عَنْ أَبِي وَائِلٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ

رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا لَمْ يَعْمَلْ مِنْ الْخَيْرِ شَيْئًا قَطُّ

إِلَّا التَّوْحِيدَ فَلَمَّا حَضَرَتْهُ الْوَفَاةُ قَالَ لِأَهْلِهِ إِذَا أَنَا

مِتُّ فَخُذُونِي وَاحْرُقُونِي حَتَّى تَدَعُونِي حُمَمَةً ثُمَّ اطْحَنُونِي

ثُمَّ اذْرُونِي فِي الْبَحْرِ فِي يَوْمٍ رَاحٍ قَالَ فَفَعَلُوا بِهِ ذَلِكَ

قَالَ فَإِذَا هُوَ فِي قَبْضَةِ اللَّهِ قَالَ فَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ

مَا حَمَلَكَ عَلَى مَا صَنَعْتَ قَالَ مَخَافَتُكَ قَالَ فَغَفَرَ اللَّهُ لَهُ

رواه أحمد



தவ்ஹீத்வாதி என்ற சொல்லும் கூட ஹதீஸ் நூல்களில் உள்ளது. வாதி என்பதற்கு அஹ்ல் என்ற

சொல் அரபு மொழியில் பயன்படுத்தப்படும். அஹ்ல் அஷ்ஷிர்க் என்றால் ஷிர்க் வாதி அஹ்ல்

அல் கிதாப் வேதமுடையோர் என்று பொருள். அஹ்ல் அத்தவ்ஹீத் என்றால் தவ்ஹீத்வாதி எனப்

பொருள். அந்தச் சொல்லையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.



حدثنا هناد حدثنا أبو معاوية عن الأعمش عن أبي سفيان عن جابر قال قال رسول الله صلى

الله عليه وسلم يعذب ناس من أهل التوحيد في النار حتى يكونوا فيها حمما ثم تدركهم

الرحمة فيخرجون ويطرحون على أبواب الجنة قال فيرش عليهم أهل الجنة الماء فينبتون

كما ينبت الغثاء في حمالة السيل ثم يدخلون الجنة قال هذا حديث حسن صحيح وقد روي من

غير وجه عن جابر



தவ்ஹீத்வாதிகளில் சிலர் (வேறு பாவங்கள் காரணமாக) நரகில் வேதனை செய்யப்படுவார்கள்.

அவர்கள் கரிக்கட்டை போல் ஆவார்கள். பின்னர் அவர்களுக்கு இறையருள் கிடைக்கும்.

நரகில் இருந்து வெளியேற்றப்பட்டு சொர்க்கத்தின் வாசலில் போடப்படுவார்கள்.

சொர்க்கவாசிகள் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். இதனால் அவர்கள் கரையோரத்தில்

புல் முளைப்பது போல் பசுமையாவர்கள். பின்னர் சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்



அறிவிப்பவர் ஜாபிர் (ரலி)



நூல் திர்மிதி 2522, அஹ்மத் 14665



தவ்ஹீத்வாதியாக இருப்பவர் தனது பாவங்களுக்காகத் தண்டிக்கப்பட்டால் கூட அவர்

கடைசியில் சொர்க்கம் செல்வார் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.



எனவே தவ்ஹீத் ஜமாஅத் என்பதும் தவ்ஹீத் வாதி என்பதும் நபி (ஸல்) அவர்கள்

பயன்படுத்திய சொல்லாகும். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை உள்ளடக்கிய சொல்லாகும்.



பெயரினால் ஒற்றுமை ஏற்படும் என்பதும் தவறான வாதமாகும். ஒரு தாய் வயிற்றில் பிறந்த

அண்ணன் தம்பிகளாக இருந்தாலும் பகைமை ஏற்படத்தான் செய்யம்.



எத்தனை பெயர்களில் இருந்தாலும் அனைவரும் அல்லாஹ்வின் சட்டத்திற்குக் கட்டுப்பட

வேண்டும் என்ற கொள்கைக்கு வந்துவிட்டால் தான் ஒற்றுமை ஏற்பட்டுவிடும்.



அதைத்தான் நபியவர்கள் அன்சாரிகளுக்கும், முஹாஜிர்களுக்கும் மத்தியில் அவர்களின்

பெயர்களை ஒரே பெயராக ஆக்காமல் ஒற்றுமைப்படுத்திக் காட்டினார்கள்.



ஒரே பெயரில் இருந்தாலும் கொள்கைகள் மாறுபட்டிருந்தால் நிச்சயமாக அங்கு ஒற்றுமை

ஏற்படாது. இதனைப் பல்வேறு வரலாறுகளும், நடைமுறைகளும் நமக்கு பாடம் படித்துத்

தருகின்றன.



சில அதிமேதாவிகள் பெயரினால் ஒற்றுமை குலைகிறது என்று கூறி வருவது அவர்களின்

முதிர்ச்சியின்மையையே படம் பிடித்துக் காட்டுகிறத



Visit : www.kattimedtntjfacebook.com

பித்ரா விநியோக கணக்கு விரைவில்...


அல்லாஹ்வின் திருபெயரால்
நோன்புப் பெருநாளை ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதற்காக இஸ்லாம் செய்துள்ள ஏற்பாடு தான் (சதகதுல் பித்ர் எனும்) நோன்புப் பெருநாள் தர்மம்.
நோன்புப் பெருநாள் தர்மம் கட்டாயமான ஒரு கடமையாகும் எனவேதான் நாம்
நமதூரிலுள்ள ஏழைகளைச் தேடிச்சென்று பெருநாளை அவர்களும் மகிழ்வுடன் கொண்டாட தேவையான உணவுப் பொருட்களை கண்ணியமான முறையில் ”தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்” விநியோகம் செய்து அல்லாஹ்வின் பேரருளால் அரும்பணியாற்றி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அதன் முறையான கணக்கு விபரங்களை உணர்வு வார இதழில் வெளியிட்டு வருகிறது. எனவே இவ்வருடமும் 150 குடும்பங்களுக்கு விநியேகம் செய்யப்பட்டது. நபி வழிப்படி ரூ 80 (நாம் பயன்படுத்தும் அரிசி 2 .2 /1 கிலோ வின் விலை ) வசூலித்து மக்களுக்கு வழங்கினோம் இதன் முழுமையான விபரம் இன்னும் சில தினங்களில் வெளியிடுகிறோம். இன்ஷா அல்லாஹ்
'மறுமை நாளைப் பற்றி (என்னிடம்) கேட்டவர் எங்கே?' என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்)' இறைத்தூதர் அவர்களே! இதோ நானே' என்றார். அப்போது கூறினார்கள்.' அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர் பார்க்கலாம்." அதற்கவர், 'அது எவ்வாறு பாழ் படுத்தப்படும்?' எனக் கேட்டதற்கு, 'எந்தக் காரியமாயினும் அது, தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி ;59




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...
TNTJ கட்டிமேடு & ஆதிரங்கம் கிளையின் சார்பாக ஈகை பெருநாள் தொழுகை பண்ணைய தெருவில் மைதானத்தில் நடைபெற்றது. இத்தொழுகையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட முண்ணுற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்த பிறகு திருத்துறைப்பூண்டி அர‌பாத் மாலிக் அவ‌ர்க‌ள் பெருநாள் குத்பா உரை நிகழ்த்தினார். இந்த பெருநாள் உரை வருகைதந்தவர்களுக்கு புதிய உத்வேகத்தை தந்தது. (அல்ஹம்துலில்லாஹ்) இந்நிகழ்ச்சியின் இறுதியில் ஒருவருக்கொருவர் ரம்ஜான் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர் இந்த நிகழ்ச்சியை கட்டிமேடு & ஆதிரங்கம் சகோத‌ர‌ர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்
plz visit : www.kattimedtntjfacebook.com

பித்ரா

ஸதக்கத்துல் பித்ர் எனும் பெருநாள் தர்மம் அனைத்து ஏழைகளுக்கும் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வும், அவனது ரஸுலும் காட்டித்தந்த வழியில் ஆண்டுதோறும் நமதூரிலுள்ள ஏழைகளைச் தேடிச்சென்று பெருநாளை அவர்களும் மகிழ்வுடன் கொண்டாட தேவையான உணவுப் பொருட்களை கண்ணியமான முறையில் ”தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்” விநியோகம் செய்து அல்லாஹ்வின் பேரருளால் அரும்பணியாற்றி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அதன் முறையான கணக்கு விபரங்களை உணர்வு வார இதழில் வெளியிட்டு வருகிறது. எனவே இவ்வருடமும் தங்கள் மற்றும் தங்களை சார்ந்தவர்களின் பித்ரா தொகை துபை திர்ஹம் 15 இந்தியாவில் பித்ரா தொகை Rs 80 வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

ஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்

ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்: புகாரி 1503ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.ஃபித்ராவின் நோக்கம்இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட் டுள்ளது.நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழை களுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.கொடுக்கும் நேரம்

மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1503, 1509இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள் தினத்தில் சுப்ஹுக்குப் பின், பெருநாள் தொழுகைக்கு முன் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்று சில சகோதரர்கள் கருதுகிறார்கள்.பெருநாள் தொழுகைக்கு முன் பெருநாள் தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்றும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ள இயலும்.பெருநாள் தொழுகைக்குப் பின்னால் கொடுக்கக் கூடாது. எத்தனை நாட்களுக்கு முன்னாலும் கொடுக்கலாம் எனவும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ளலாம்.பெருநாள் தொழுகைக்கு முன் என்பதை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ள இடமிருந்தாலும் வேறு பல ஹதீஸ்களை ஆராயும் போது, “பெருநாள் தொழுகைக்குப் பின்னர் கொடுக்கும் அளவுக்கு தாமதிக்கக் கூடாது. பெரு நாளைக்கு சில நாட்களுக்கு முன்னால் கொடுக்கலாம்” என்ற கருத்தே சரியானது என்பது உறுதியாகிறது.ரமலான் ஸகாத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்திருந்தார்கள். அப்போது ஷைத்தான் வந்து அதிலிருந்து எடுக்கலானான். உடனே “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன்” என்று நான் கூறினேன். அதற்கு அவன் “எனக்குக் குடும்பம் உள்ளது. எனக்குக் கடும் தேவை உள்ளது” எனக் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, “நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்?” என்று கேட்டார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! அவன் வறுமையை முறையிட்டதால் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்” என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம் வருவான்” என்று கூறினார்கள். நான் அவனுக்காக காத் திருந்தேன். அவன் மீண்டும் வந்து உணவை அள்ள ஆரம்பித்தான். அவனைப் பிடித்து “உன்னை நபிகள் நாயகத்திடம் கொண்டு போகப் போகி றேன்” என்று கூறினேன். “எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது. இனி வர மாட்டேன்” என்று அவன் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்ற போது, “உன் கைதி என்ன ஆனான்?” என்றார்கள். அவன் கடுமையான தேவையை முறையிட்டான். இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன் எனக் கூறினேன். “அவன் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் அவனுக்காகக் காத்திருந்தேன். மூன்றாவது நாளும் வந்தான்…. என்ற ஹதீஸ் புகாரியில் வகாலத் என்ற பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.சுருக்கமாக புகாரி 3275, 5010 ஆகிய எண்களில் கூறப்பட்டுள்ளது.“இந்த ஹதீஸில் ஃபித்ரா என்று கூறப்படவில்லை. ரமளான் ஜகாத் என்று தான் கூறப்பட்டுள்ளது. இது ரமளான் மாதத்தில் ஜகாத்தைத் திரட்டுவதையே குறிக்கிறது. ஃபித்ராவை குறிக்கவில்லை” என்று சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் தவறாகும்.ஜகாத் என்பது ஆண்டு தோறும் ரமளானில் மட்டும் திரட்டப்படும் நிதி அல்ல. அன்றாடம் திரட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் ‘ரமளான் ஜகாத்’ என்ற சொல் ஃபித்ராவை மட்டும் தான் குறிக்கும்.இதை நாம் சுயமாகக் கூறவில்லை. பின்வரும் ஹதீஸிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.ரமளான் ஸகாத்தை அடிமை, சுதந்திரமானவன், ஆண், பெண் அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரிச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு கோதுமை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என்ற ஹதீஸ் நஸாயீ 2453, 2455 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.“ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என்று ரமளான் ஜகாத்தை ஏற்படுத் தினார்கள்” என்பது ஃபித்ராவைத் தான் குறிக்கும். ஜகாத்தைக் குறிக்காது. ஜகாத் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். அனைவருக்கும் ஒரு ஸாவு என்று ஜகாத் வசூலிக்கப்படாது.எனவே அபூஹுரைரா (ரலி) சம்பந்தப் பட்ட ஹதீஸ் ஃபித்ராவையே குறிக்கிறது.எனவே நோன்புப் பெருநாள் தர்மம் மக்களிடம் திரட்டப்பட்டது என்பதற்கும் இது ஆதாரமாக அமைந்திருக்கிறது. திரட்டும் பணியை பெருநாளைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கலாம் என்பதற்கும் இது ஆதரமாக அமைந்துள்ளது.ஃபித்ரா தர்மத்துக்காக திரட்டப்பட்ட பொருட்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொறுப்பில் இருந்துள்ளது. மூன்று நாட்களும் ஷைத்தான் (அல்லது கெட்ட மனிதன்) வந்து அதை அள்ளியிருக்கிறான் என்பதிலிருந்து பெருநாளைக்கு சில நாட்களுக்கு முன்பாகவே ஃபித்ரா வைத் திரட்டலாம் என்பது தெரிகிறது.நபித் தோழர்கள் நோன்புப் பெரு நாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் ஃபித்ராவைக் கொடுத்து வந்தனர் என்று புகாரி 1551-வது ஹதீஸ் கூறுகிறது.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே நடந்ததை இது குறிக்கும் என்றால் இது மற்றொரு ஆதாரமாக அமையும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னர் நபித் தோழர்கள் இவ்வாறு கொடுத்து வந்தார்கள் என்பது இதன் கருத்தாக இருந்தால் அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பை உறுதி செய்வதாக இது அமையும்.எனவே, நோன்புப் பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பதில் சந்தேகம் இல்லை. பெருநாள் தொழுகை ஆரம்பமாகும் வரை அதன் கடைசி நேரம் உள்ளது.source: www.tntj.net குறிப்பு : ரமலான் அன்பளிப்பு என்ற பெயரிலும், குறிப்பிடத் தொகையை நிர்ணயிக்காமலும் ஃபித்ராவைத் கொடுப்பது தவறான செயலாகும்

ரமலான் ஏற்பாடு


1. TNTJ கட்டிமேடு & ஆதிரெங்கம் கிளையின் சார்பாக ரமலான் மாதம் முழுவதும் நோன்பாளிகள் நோன்பு திறக்க நோன்பு கஞ்சி காச்ச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு முறை ரூ 2000 என நிர்ணயக்கப்பட்டுள்ளது. இரண்டு நபர்களாகவும் செய்யலாம். நோன்பு கஞ்சி காச்ச விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள உள்நாடுஅப்துல் ரஹ்மான் : 919715188464 வெளிநாடு சேக்தாவுது (துபாய்) : 00971556876834 2. பள்ளியிலேயே நோன்பு திறக்கவும் (இப்தார்) ரூ 1000 நிர்ணயக்கப்பட்டுள்ளது.இப்தார் தொடர்புக்கு உள்நாடு : சேக் 919698158143 3.மிகவும் சிறப்புக்குறிய லைத்துல் கதுர் இரவை நாடி ரமலான் கடைசி 10 இரவுவும் சஹர் உணவு ஏற்பாடு செய்யப்படவுள்ளது இந்த செலவினை பகிர்ந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள்தொடர்புக்கு பாஷித் :919894677930 அல்லாஹ் மேன்மேளும் உங்களுக்கு பரக்கத்தும், ரஹ்மத்தும் செய்வானாக. ஆமீன்.. மேற்கண்டவர்ரை தனி நபராகவோ , குடும்பமாகவோ , கூட்டாகவோ செய்யலாம்

நமதூரில் வருகிற ரமலானில்



இறைவனின் திருப்பெயரால்..

இன்ஷா அல்லாஹ் வருகிற ரமலானில் நமதூர் தவ்ஹீத் மர்கஸில்
இப்தார் விருந்து மற்றும் கடைசி 10 சஹருடைய நேர சாப்பாடு
கொடுப்பவர்கள் தாங்கள் கொடுக்கவிருக்கும் நாளையும், பொருளையும்
எங்களுக்கு தெரியப்படுத்தவும் முறையாக செயல் பட ஏதுவாக இருக்கும்
கஞ்சியை சென்ற ஆண்டு போல திருத்துரைப்புண்டி தவ்ஹித் மர்கஸிலேயே
வாங்கி கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது

அல்லாஹ் மேன்மேளும் உங்களுக்கு பரக்கத்தும், ரஹ்மத்தும் செய்வானாக. ஆமீன்..

குழந்தைகளுக்கு காலையிலும், மாலையிலும் மார்க்க கல்வியோடு அரபி ஓதுதல், எழுதுதல், குரானை மணனம் செய்தல், எம் பெருமானார் நபி(ஸல்) அவர்களின் வாழ்கையை அறிந்து கொள்ளுதல் மற்றும் உலக கல்வியின் அவசியத்தை வலியுருத்துவது போன்ற பாடம் நடைபெற்று கொண்டு இருக்கிறது இன்னும் உங்களின் கருத்துக் கலையும் எதிர் பார்க்கிறோம்
இவண்
TNTJ

நமதூரில் தாவா பனி மேற்கொள்ள உதவிடுவீர்

இறைவ‌னின் திருப்பெயரால்...

அன்பிற்குறிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இஸ்லாமியர்களாக பிறந்துவிட்ட நாம் அதனுடைய கொள்கை அதிகமனோர் தெரியாதவர்களாக உள்ளோம்.

இஸ்லாம் என்ற பெயரில் இனைவைப்பு, மூடநம்பிக்கை, அறியமைக்கால பழக்க வழக்கங்கள் நமதூர் மக்களிடம் குடிக்கொண்டிருக்கின்றன. அல்லாஹ்வின் கிருபையால் ஏகத்துவ பிரச்சாரத்தின் மூலம் நாம் நேர்வழி பெற்றுள்ளோம் அல்ஹம்துலில்லாஹ்.

நாம் அறிந்த இந்த சத்தியத்தை பிறருக்கு எடுத்து சொல்வது நம்மீது கடமையாக உள்ளது.

அல்லாஹ் கூறுகின்றான் " நீங்கள் மனிதக் குலத்திற்கு தேர்வு செய்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்குகிறீர்கள் நன்மையை ஏவி தீமையை தடுக்குகிறீர்கள்" (அல் குரான் 3:110) இன்னும் நபி(ஸல்) தன் இருதி ஹஜ்ஜில் கூறும்போது "என்னிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தாலும் அதை மற்றவருக்கு எடுத்து சொல்லுங்கள்" எனக் கூறினார்கள்.

இக்கால கட்டத்தில் மக்களின் தீமைகள் அனாச்சாரங்கள் பன்மடங்கு பெறுகின்றது குறிப்பாக அல்லாஹ்வுடனும், அவனுடய தூதருடனும் போர் செய்யும் அளவுக்கு குற்றமான வட்டியை சர்வசாதரனமாக மக்கள் வாங்குவதும் , கொடுப்பதுமாக இருக்கின்றனர் மற்றும் விபச்சாரம், இனைவைப்பு, வரதட்சனை, சினிமா, நாடகம் என மக்களின் வழிகெட்ட பாதை விரிவடைந்து கொண்டே போகிறது இத்தகைய தீமையிலிருந்து நமதூர் மக்களை மீட்டு நேர்வழியின் பால் அழைப்பது நம் ஒவ்வொருவர்மீதும் கடமையாகும்

எனவேதான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தன்னுடைய பிரச்சாரத்தின் மூலம் இத்தகைய தீமைகளை தடுத்து மக்களை நேர்வழியின் பால் அழைக்கும் பனியை திறம்பட செய்கிறது அல்ஹம்துலில்லாஹ். முஸ்லிம்களிடம் மட்டுமில்லாமல் கிருஸ்த்துவர்கள், நாத்திகர்களிமும் விவாத்தித்து இஸ்லாம் மட்டும்தான் இறைவனின் மார்க்கம் என ஆனித்தரமாக நிருபித்து வருகிறது

மேலும் முஸ்லிம்களிடம் உள்ள அனாச்சாரங்களை ஒழித்திட நமதூர் தவ்ஹீத் ஜமாத் சார்பில் தெருமுனைப் பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள், பெண்கள் பயான், துன்டு பிரசுரங்கள், CDக்கள், தனிநபர் தாவா உள்ளிட்ட பலவித வழிகளின் மூலம் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துறைத்து வருகின்றோம் இப்பனிகள் தொடர்ந்து நடைபெற பொருளாதார உதவியை செய்து தாங்களும் இப்பனியில் பங்கு கொண்டு மருமையில் வெற்றியடைய வேண்டும் என விரும்புகிறோம்.

அல்லாஹ் கூருகின்றான் "எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்த போதிலும், அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான்" (அல் குரான் 34:39) நபி(ஸல்) கூருகினார்கள் "அடியார்கள் ஒவ்வொரு நாள் காலை எழுந்ததும் இரண்டு வானவர்கள் இரங்காமல் இருப்பதில்லை அவ்விருவரில் ஒருவர் இறைவன் (உன்வழியில்) செலவு செய்யும் ஒருவருக்கு பொருளை வழங்குவாயக என்று கூருவார் மற்றொருவர் இறைவா செலவு செய்யாமல் இருக்கும் நபருக்கு அழிவை கொடுப்பாயக என்று கூருவார்" புகாரி:1442, முஸ்லிம்:1010

சகோதரர்களே இறைவனின் வாக்குறுதி பொய்யாகாது இப்பணிக்காக தர்மம் செய்து பல மடங்கு (செல்வத்தை) பெருக்கிக்கொல்லுங்கள் இந்த பிரச்சாரத்தின் மூலம் ஒருவர் நேர்வழி அடைந்தாலும் அந்த நபர் மூலம் எத்தனை பேர் நேர்வழி பெற்றாலும் அதிலும் உங்களுக்கு நன்மை உண்டு உங்களுக்கே தெரியாமல் மருமையில் மலைப்போல் குவிந்து கிடக்கும் நன்மையை இன்ஷாஅல்லாஹ் பெற்றுடுங்கள்.

ஆனால் நமதூருக்கு அருகாமையில் இருக்கும் மாற்றுமத்தினர் சிலர் நம்மைவிட துல்லியமாக படித்து தெரிந்தவர்களாக உள்ளனர். அவர்களை நாங்கள் சந்தர்ப்பம் வரும்போது அடையாளம் காட்ட விரும்புகிறோம்.

நாம் இதற்க்கு முன்பு ஒரு அறிவிப்பு செய்தோம் தவ்ஹீத் பள்ளிக்கு ஒரு இமாம் ஏற்ப்பாடு செய்ய உள்ளோம் சம்பளம் மாதம் ரூ 8000 தேவைப்படுகிறது என்றோம். உடனே நமது கொள்கை சகோதரர்கள் சிலர் தேவையான பணத்தை முன்கூட்டியே தருவதாக வாக்களித்துள்ளனர்.அதுபோல இதை படிக்கும் ஒவ்வொருவரும் உங்களுடைய பொருளாதார உதவியயை தாராளமாக செய்யுங்கள். தங்களால் முடிந்த வகையில் பொருளாதர உதவியாகவோ அதை திறட்டி அனுப்புபவர்களாக இருந்தால் நல்லது. இமாம் கொண்டு வருவதற்கு காலதாமதம் ஏற்படுவதற்கு இமாம் குடும்பத்தோடு தங்குவதற்கு வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை. உங்களில் யாருக்கேனும் வாடகைக்கு வீடு நமதூரில் இருப்பதாக தகவல் கிடைத்தால் தெரியப்படுத்தவும்


தொடர்ப்புக்கு: ரஹமத்துல்லாஹ் 919443874058, சாகுல் 919659604545, பைசுல்லா 919976466464

(14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்

திருவாரூரில் இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். பிப் 14 அன்று TNTJ மாநில தலைமை இந்திய முஸ்லிம்களின் ஜீவதார கோரிக்கையான மத்தியிலும், மாநிலத்திலும் முஸ்லிம்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் தனி இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் வாழ்வுரிமை போரட்டத்தை அறிவித்து அதனை நமதூர் ஜமாத்துக்கும் கிளையின் சார்பாக தெரிவித்தோம். மேலும் கொள்கை ரீதியாக நமக்குள் சில கருத்து வேருபாடுகள் இருந்தாலும் அனைவரும் கலந்து கொள்வதால் ஏற்படும் சமுதாய நன்மையையும் எடுத்து கூறப்பட்டது. வருவதாக ஜமாத்தினர் தெரிவித்தனர். அதன்படி திருவாரூக்கு கட்டிமேடு-ஆதிரெங்க முஸ்லிம் ஜமாத் மன்ற தலைவர் ஜனாப் முனாப்பும் பொருப்பாளர்களும் தனியாக காரில் வந்து கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கிளையின் சார்பாக 6 வேன்களில் நமதூர் மக்கள் கலந்து கொண்டனர். அல்ஹமதுலில்லாஹ்...

நமதூர் குழந்தைகளும் மார்க்க அறிஞர்களாக வர வாய்ப்பு

இன்ஷா அல்லாஹ் தற்காலியமாக TNTJ மர்க்கஸில் விரைவில் இமாமுக்கு ஏற்பாடு செய்யவுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். அதனால் உங்கள் வீட்டு குழந்தைகளை பன்னைத்தெருவில் உள்ள TNTJ பள்ளிக்கு அனுப்பி வையுங்கள். மார்க்க கல்வியை கற்றுக்கொண்டால் இம்மை மற்றும் மறுமை வெற்றிக்கு பேருதவியாக இருக்கும் என்பதை தெருவித்து கொள்கிறோம். இமாமுக்கு மாத சம்பளம் Rs 8000 தேவைப்படுகிறது. பள்ளிக்கு என்று வேறு எந்த விதமான வருமானம் இல்லை, உங்கள் நன்கொடைகளை பெற்றுதான் இயங்குகிறது என்பதை அறிவீர்கள். அல்லாஹ்வின் பாதையில் நமதூர் குழந்தைகளின் நலனுக்காக செலவிடுங்கள். இன்ஷா அல்லாஹ் நமாதூர் குழ்ந்தைகளும் மார்க்க அறிஞர்களாக வர வாய்ப்பு உள்ளது.

தொடர்புக்கு : ரஹமத்துல்லாஹ் 9443874058, சாகுல் 9659604545, பைசுல்லா 9976466464