மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)

அல்லாஹ் அக்பர் தவ்ஹீத் சகோதரர்கள் அணி அணியாக TNTJ வில் இருந்து விலகி NTF இணைந்த வண்ணம் உள்ளார்கள்

கியாமத்) 🌏 உலக அழிவு நாளின் அடையாளங்கள்


1. (கியாமத்)  🌏 உலக அழிவு நாளின் அடையாளங்கள்

உலகம் எப்போது அழிக்கப்படும் என்பதை இறைவன் மட்டுமே அறிவான். நபிமார்களோ,வானவர்களோ அந்த நாள் எப்போது என்பதை அறிய முடியாது. ஆயினும் அந்த நாள் நெருங்கும் போது ஏற்படும் அடையாளங்கள் சிலவற்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துச் சென்றனர். அந்த அடையாளங்கள் எவை என்பதின் பதிவுதான் இது..

சிறிய அடையாளங்கள்

மகளின் தயவில் தாய்

பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்

குடிசைகள் கோபுரமாகும்

விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்

தகுதியற்றவர்களிடம் பொறுப்பு

பாலை வனம் சோலை வனமாகும்

காலம் சுருங்குதல்

கொலைகள் பெருகுதல்

நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்

பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது

நெருக்கமான கடை வீதிகள்

பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்

ஆடை அணிந்தும் நிர்வாணம்

உயிரற்ற பொருட்கள் பேசுவது

பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்

தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்

பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்

சாவதற்கு ஆசைப்படுதல்

இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்

முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்

இது வரை நிகழாத அடையாளங்கள்

யூதர்களுடன் மாபெரும் யுத்தம்

கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்

யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்

கஹ்தான் இன மன்னரின் ஆட்சி

அல்ஜஹ்ஜாஹ் மன்னர்

எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்

செல்வம் பெருகும்

மாபெரும் யுத்தம்

பைத்துல் முகத்தஸ் வெற்றி

மதீனா தூய்மையடைதல்

---------------------------------------------------

மாபெரும் பத்து அடையாளங்கள்

1 - புகை மூட்டம்

2 - தஜ்ஜால்

3 - ஈஸா நபியின் வருகை

4 - யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை

5 - அதிசயப் பிராணி

6 - மேற்கில் சூரியன் உதிப்பது

7, 8, 9 - மூன்று பூகம்பங்கள்

10 - பெரு நெருப்பு.             தொடரும் இன்ஷா அல்லாஹ்.....

#ஜனாஸா_தொழுகையின்_போது_ஓதும் தூவா

#ஜனாஸா_தொழுகையின்_போது_என்ன_ஓதுவது என்று நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்....

அவர்களுக்காக .....

1.முதல் தக்பீருக்குப் பின்,
_________________________

முதல் தக்பீர் கூறிய பின் ....

அல்ஹம்து அத்தியாயத்தை (சூரத்துல் ஃபாத்திஹா ) ஓத வேண்டும்.

ஆதாரம்:- புகாரி, 1335

2.இரண்டாம் தக்பீருக்கு பின்,
___________________________

இரண்டாம் தக்பீர் கூறிய பின் ......
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டும்

”அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.

ஆதார நூல்:- பைஹகி ,4/39

3,4 .மூன்றாவது மற்றும் நான்காவது தக்பீருக்கு பின்....
_____________________________

இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும், மறுமை நன்மைக்காகவும் துஆச் செய்ய வேண்டும். ஜனாஸா தொழுகையின் போது நபி(ஸல்) அவர்கள் பல்வேறு துஆக்களை கேட்டுள்ளார்கள். அவற்றில் இயன்றதை நாம் ஓதிக் கொள்ளலாம்.

அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் ஃகைரன் மின் தாரிஹி வஅஹ்லன் ஃகைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் ஃகைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ர் வமின் அதாபின்னார்

அறிவிப்பவர்:- அவ்ஃப் பின் மாலிக்(ரலி)
முஸ்லிம்: 1601

பொருள்: இறைவா..!

இவரை மன்னித்து அருள் புரிவாயாக..!

இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..!

இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!

இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக..!

பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக..!

அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக..!

கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!

பேய்பிசாசு ஓர் பித்தலாட்டமே*


*பேய்பிசாசு ஓர் பித்தலாட்டமே*



மனிதன் மரணித்த பிறகு அவனது உயிர் (ஆவி) எங்கே செல்கிறது? என்ன செய்கிறது? என்ற வினாக்களுக்கு விடை கண்டால் பேய்கள் உண்டா? என்ற வினாவுக்கும் விடை கிடைக்கும். ஏனெனில் இறந்தவர்களின் ஆவிகள் இவ்வுலகுக்குத் திரும்பி வந்து சுற்றிக் கொண்டிருக்கின்றன என்ற நம்பிக்கை தான் பேய்களைப் பற்றிய நம்பிக்கையின் அடிப்படை.

இறந்தவர்களது ஆவிகளின் நிலை என்ன? என்பதை முதலில் காண்போம். அதன் பிறகு பேய்களின் ஆதரவாளர்கள் எழுப்பும் வினாக்களையும் ஆராய்வோம்.

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதைக் குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. திருக்குர்ஆன் 39:42

பேய், பிசாசுகள் கிடையாது என்பதற்கு திருக்குர்ஆனின் இந்த ஒரு வசனமே போதிய சான்றாக அமைந்துள்ளதை சிந்திப்பவர்களால் அறிய முடியும். இறந்து விட்ட மனிதர்களின் ஆவிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் (தனது கைவசத்தில்) வைத்திருப்பதாக இவ்வசனத்தில் இறைவன் குறிப்பிடுகிறான். ஆவிகள் அனைத்தும் இறைவனது கைவசத்தில் இருப்பதாக இறைவன் தெளிவாக அறிவித்த பின்னர் அவனது கட்டுப்பாட்டை உடைத்தெறிந்து விட்டு ஆவிகள் தப்பித்து வந்து விடுகின்றன என்று ஒரு முஸ்லிம் நம்ப முடியாது.

பேய்கள் இருப்பதாக நம்புபவர்கள் இறைவனது இந்த வசனத்தை மறுத்தவர்களாவார்கள்; அல்லது இறைவனது கட்டுப்பாடு வலுவற்றது என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள். இரண்டில் எதை ஏற்றாலும் அவர்கள் இஸ்லாமிய வட்டத்திலிருந்து தாங்களாகவே வெளியேறி விடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஒரு பிரார்த்தனை இந்த வசனத்திற்கு விளக்கமாக அமைந்துள்ளதைக் காணுங்கள்.

உங்களில் யாரேனும் படுக்கைக்குச் சென்றால், ‘என் இறைவா! உன் திருப்பெயராலேயே திரும்பவும் எழுவேன். (உறக்கத்தில்) எனது உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அற்கு நீ மன்னித்து அருள் புரிந்திடு! அதை நீ திரும்ப அனுப்பினால் உனது நல்லடியார்களை நீ பாதுகாப்பது போல் எனது உயிரையும் நீ பாதுகாத்து விடு’ என்று கூறட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.  அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி). நூல்கள் : புகாரி 6320, 7393 முஸ்லிம் 5257

மனிதன் தூங்கும் போது தற்காலிகமாகவும், மரணத்தின் போது நிரந்தரமாகவும் மனித உயிர்களை அல்லாஹ் தன் கைவசத்தில் எடுத்துக் கொள்கிறான் என்று இந்த நபிமொழியும் தெளிவாக்க் கூறுகின்றது.

திருக்குர்ஆனின் 39:42 வசனம் கூறும் அதே கருத்தை இந்த நபிமொழியும் கூறுகின்றது.

உறக்க நிலையிலும், மரணித்த பின்னரும் மனிதர்களின் ஆவிகள் இறைவனது கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன என்று அல்லாஹ்வும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இரண்டாவது கருத்துக்கு இடமில்லாத வகையில் கூறியதற்கு எதிராக பேய்களிருப்பதாக ஒரு முஸ்லிம் எப்படி நம்ப முடியும்? பேய்களை நம்புபவன், இறைவனையும், இறைத்தூதரையும் நம்பியவனாக முடியுமா?

இந்த இரண்டு சான்றுகளே பேய்களை மறுக்கப் போதுமானவை என்றாலும் அதிக விளக்கத்துக்காக மேலும் பல சான்றுகளையும் காண்போம்.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும்போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.  திருக்குர்ஆன் 23:99,100

பேய்களைப் பற்றி நிலவும் எல்லா நம்பிக்கைகளையும் இந்த வசனம் தகர்த்தெறிகின்றது.

இறைவா என்னைத் திரும்ப உலகுக்கு அனுப்பி வை என்று மனிதன் கேட்டுக் கொண்டாலும் கூட திரும்ப அனுப்புவதாக இல்லை என இறைவன் இங்கே தெரிவிக்கிறான். இதன் மூலம் இவ்வுலகுக்குத் திரும்பி வருவதற்கு மனிதன் ஆசைப்பட்டால் கூட அது நடக்கப் போவதில்லை என்பது தெளிவாகின்றது.

இவ்வுலகுக்குத் திரும்பி வந்து தவறான காரியங்களில் ஈடுபடுவதற்கு இல்லாமல் நல்லறங்களைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு மனிதன் கேட்கிறான். நல்லறங்கள் செய்வதற்காகக் கூட உலகுக்குத் திரும்ப அனுப்புவது இயலாது என்று இறைவன் இங்கே அறிவிக்கின்றான்.

நல்லறங்கள் செய்வதற்காகக் கூட மனிதன் திரும்ப அனுப்பப்படுவதில்லை என்றால் பிறரைப் பயமுறுத்தவும், பிறருக்குத் தொல்லை தரவும், பிறர் மீது மேலாடி அமைதியின்மையை ஏற்படுத்தவும் இறந்தவர்களின் உயிர்கள் எப்படி உலகுக்குத் திரும்ப இயலும்?

இந்த வசனத்தின் இறுதிப் பகுதி முக்கியமான பகுதியாகும். மனிதன் மரணித்த பின்பு அவனுக்கும் உலகுக்கும் இடையே திரை இருப்பதாக இறைவன் குறிப்பிடுகிறான். திரை என்று நாம் மொழியாக்கம் செய்த இடத்தில் பர்ஸக் எனும் அரபிச் சொல் இடம் பெற்றுள்ளது. பர்ஸக் என்றால் கண்களுக்குப் புலப்படாத, உடைக்க முடியாத திரை என்பது பொருள்.

இதற்குச் சான்றாக இதே வார்த்தை இடம் பெற்றுள்ள மற்றொரு வசனத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக அமையும்.

இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு (பர்சக்) திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது. திருக்குர்ஆன் 55:19,20

விஞ்ஞானிகளும் இதனை ஆராய்ந்து இரு கடல்களும் நமது பார்வைக்கு இணைந்திருப்பதாகத் தோன்றினாலும், ஒன்றுடன் மற்றொன்று கலந்து விடுவதில்லை என்று உறுதி செய்கின்றனர்.

இதில் பயன்படுத்தியுள்ள பர்சக் என்ற வார்த்தையைத் தான் மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனத்திலும் இறைவன் பயன்படுத்தியுள்ளான்.

மனிதன் இறந்த பின் அவனுக்கும், இவ்வுலகுக்கும் இடையே பர்ஸக் எனும் திரை போடப்படுவதாகக் கூறியதன் மூலம் இறந்த மனிதன் எவ்வகையிலும் இவ்வுலகுடன் தொடர்பு வைத்திருக்க முடியாது என்பதை இறைவன் அறிவிக்கின்றான்.

திருக்குர்ஆனின் இவ்வசனத்தை நம்பும் ஒரு முஸ்லிம், இறைவன் ஏற்படுத்திய அந்தத் தடையை ஆவிகள் உடைத்துக் கொண்டு, மண்ணுலகம் வந்து நடமாடும் என்று எப்படி நம்ப முடியும்? ஒன்றுக்கொன்று முரணான இரண்டு நம்பிக்கைகள், ஒரு உள்ளத்தில் எப்படி இருக்க முடியும்?

பர்ஸக் எனும் மகத்தான திரை குறிப்பிட்ட சில தினங்களுக்கு மட்டும் போடப்படுவதில்லை. மாறாக, மனிதர்கள் திரும்பவும் உடலுடன் எழுப்பப்படும் காலம் வரையிலும் இந்த மகத்தான திரை இருந்து கொண்டிருக்கும் என்றும் இறைவன் இதே வசனத்தில் தெரிவிக்கின்றான்.

இறந்தது முதல் எழுப்பப்படும் வரை மகத்தான திரைக்குப் பின்னே இருக்கும் ஆவிகள் – நல்லறங்கள் செய்வதற்காக உலகுக்கு வர அனுமதி கேட்கும் போது அனுமதி மறுக்கப்பட்ட ஆவிகள் – எப்படி இந்த உலகுக்கு வர இயலும்?

பேய்களுக்கு இஸ்லாத்தில் அறவே இடமில்லை என்பதை இவ்வசனத்தில் இருந்தும் உறுதி செய்து கொள்ளலாம்.

மரணித்தவரின் ஆவி ஒரு போதும் இவ்வுலகுக்கு வருவது சாத்தியமே இல்லை என்பதை அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் இரண்டாவது கருத்துக்கு இடமின்றி தெளிவாக எடுத்துரைக்கின்றார்கள்.

உங்களில் எவரேனும் மரணித்து விட்டால் காலையிலும், மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்தில் உள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக அவர் இருப்பின் நரகத்திலுள்ள அவரது இடம் அவருக்கு எடுத்துக் காண்பிக்கப்படும். கியாமத் நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடமாகும் என்றும் அவரிடம் கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி). நூற்கள் : புகாரி 1338, 1374, 1379, 6515, முஸ்லிம் 5505

மரணித்த மனிதன் கியாம நாள் வரை (திரும்பவும் உடலுடன் எழுப்பப்படும் வரை) மண்ணறையிலேயே இருந்தாக வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய பிறகு இறந்தவரின் ஆவிகள் இவ்வுலகுக்குத் திரும்பவும் வருகின்றன என்று எப்படி நம்ப முடியும்? அப்படி நம்புபவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனையைப் பகிரங்கமாக மறத்தவனாக ஆவான் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்.

மனிதர்களுடைய ஆவிகளின் நிலை குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலும் விளக்குவதைக் காணுங்கள்!

மரணித்தவர் அடக்கம் செய்யப்பட்டதும் கருநிறமும், நீலநிறக் கண்களும் உடைய இரண்டு வானவர்கள் அவரிடம் வருவர். ஒருவர் முன்கர். மற்றொருவர் நகீர். இந்த மனிதர் பற்றி (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி) நீ என்ன கருதியிருந்தாய்? என்று அவ்விருவரும் கேட்பர். “அதற்கு அவர், முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார். அவனது அடியாருமாவார். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவரும் இல்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது அடியாரும், தூதரும் ஆவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்” என்று அந்த மனிதர் கூறுவார். “உலகில் வாழும் போது இவ்வாறே நீ நம்பியிருந்தாய் என்பதை நாங்களும் அறிவோம்” என்று அவ்வானவர்கள் பதிலளிப்பர்.

பின்னர் அவரது மண்ணறை விசாலமான அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு ஒளிமயமாக்கப்படும், பின்பு அவரை நோக்கி உறங்குவீராக! என்று கூறப்படும். “நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறிவிட்டுத் திரும்பி வருகிறேன்” என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள் “நெருக்கமானவரைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு புது மணமகன் உறங்குவதைப் போல் நீர் உறங்குவீராக! இந்த இடத்திலிருந்து இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக!” என்று கூறுவார்கள்.

இறந்த மனிதன் முனாஃபிக்காக (சந்தர்ப்பவாதியாக) இருந்தால் அவனிடம் இக்கேள்வியைக் கேட்கும் போது அம்மனிதன் “இந்த முஹம்மத் பற்றி மனிதர்கள் பலவிதமாகக் கூறுவதைச் செவிமடுத்தேன். மற்றபடி இவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்பான்.

அதற்கு அவ்வானவர்கள் “நீ இப்படித்தான் உலகிலும் கூறிக் கொண்டிருந்தாய் என்பதை நாம் அறிவோம் எனக் கூறுவர். அதன் பின் பூமியை நோக்கி “இவரை நெருக்கு எனக் கூறப்படும். அவரது விலா எலும்புகள் நொருங்கும் அளவுக்கு பூமி அவரை நெருக்க ஆரம்பிக்கும். அவனது இடத்திலிருந்து அவனை இறைவன் எழுப்பும் வரை அவன் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி). நூல் : திர்மிதீ

நல்ல மனிதர்களது உயிர்களானாலும், கெட்ட மனிதர்களது உயிர்களானாலும் இவ்வுலகுக்குத் திரும்பி வர வழியே இல்லை என்பதற்கு இதுவும் பலமான சான்றாக உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இங்கே பயன்படுத்தியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் பேய்களுக்குச் சம்மட்டி அடியாக அமைந்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.

உலகில் நல்லவனாக வாழ்ந்த மனிதன், வானவர்களின் விசாரணைக்கு சரியான பதிலைக் கூறுகிறான். அதன் பிறகு அவனுக்கு சொர்க்கத்தில் கிடைக்கவிருக்கும் பாக்கியங்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. இதனைக் கண்ட அம்மனிதன் தனது இல்லத்துக்குச் சென்று இதனைத் தெரிவித்துவிட்டு வருவதற்கு அனுமதி கோருகிறான். அந்தக் கட்டத்தில் “புது மாப்பிள்ளை போல் உறங்குமாறு இறைவனால் கூறப்படுகின்றது. தற்காலிகமாக சிறிது நேரம் இவ்வுலகுக்கு வந்து விட்டு மீண்டும் திரும்பி வருவதற்குக் கூட நல்ல உயிர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. கியாமத் நாள் வரையிலும், இறைவன் எழுப்பும் காலம் வரையிலும் ஆழ்ந்த உறக்க நிலையிலேயே நல்ல உயிர்கள் இருந்து வருகின்றன என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

இந்த உறக்கத்தினிடையே காலையிலும், மாலையிலும் அவனுக்கு சொர்க்கம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்பதை முந்தைய ஹதீஸ் கூறுகின்றது. இது நல்லடியார்களது உயிர்களின் நிலைமை.

மரணித்த மனிதன் கெட்டவனாக வாழ்ந்து மறைந்திருந்தால் அவன் திரும்பவும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் வரை பூமியால் நெருக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறான் என்பதையும் இந்த ஹதீஸ் கூறுகின்றது.

கியாமத் நாள் வரை உறக்க நிலையில் இருந்து வரும் நல்ல ஆவிகளும், அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் பூமியால் நெருக்கப்படும் கெட்ட ஆவிகளும் இவ்வுலகுக்கு வர முடியாது என்பதற்கும் இந்த ஹதீஸ் தெளிவான சான்றாக அமைந்துள்ளது.

இதன் பின்னரும் பேய்கள் என்றொரு படைப்பு உள்ளதாக நம்புபவர்கள் முன்னர் நாம் குறிப்பிட்ட குர்ஆன் வசனங்களை நம்ப மறுக்கிறார்கள். மேலே கூறிய நபிமொழிகளையும் நம்ப மறுக்கிறார்கள். இந்த நபிமொழியில் கூறப்படும் முன்கர், நகீர் எனும் மலக்குகளை நம்ப மறுக்கின்றார்கள் என்பதே பொருளாகும்.

“ஆமன்து பில்லாஹி, வமலாயிகதிஹி வகுதுபிஹி வருஸுலிஹி……..

என்று கூறி அல்லாஹ்வையும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் நம்புவதாக உறுதியளிக்கும் முஸ்லிம் பேய் இருப்பதாக நம்பும் போது இந்த நான்கையும் ஒரே நேரத்தில் மறுத்தவனாக ஆகிவிடுகின்றான்.

இங்கே எடுத்துக் காட்டப்பட்ட விஷயங்களே இந்த விஷயத்தில் சரியான முடிவுக்கு வரப் போதுமானவை என்றாலும் எஞ்சியுள்ள இன்னும் சில ஐயங்களையும் நீக்கும் விதமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய மற்றும் சில ஹதீஸ்களையும் காண்போம்.

மனிதன் மரணித்த பின்னர் திரும்பவும் இவ்வுலகுக்கு அவனது உயிர் வருவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்குமானால் மனிதர்களிலேயே மிகவும் உயர்ந்த நிலையைப் பெற்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும். அல்லாஹ்வின் தூதரான அவர்களுக்குக் கூட இந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதை அல்லாஹ்வின் தூதரே தெரிவித்து விடுகின்றார்கள்.

“பூமியில் சுற்றிக் கொண்டிருக்கக் கூடிய சில வானவர்கள் உள்ளனர். என் சமுதாயத்தினரின் ஸலாமை அவர்கள் என்னிடம் சேர்ப்பிக்கிறார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி). நூல்கள் : நஸாயீ, தாரிமி

இந்த ஹதீஸின் ஒவ்வொரு வார்த்தையும் பொறுக்கியெடுத்து பயன்படுத்தியது போல் ஆழமான அர்த்தங்களை உள்ளடக்கியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அவர்களுக்காக அவர்களது சமுதாயத்தினர் ஸலாம் கூறினால் அந்த ஸலாமைக் கொண்டு போய்ச் சேர்ப்பிப்பதற்காகவென்றே இறைவன் வானவர்களை நியமனம் செய்திருக்கிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “இருந்த இடத்திலிருந்தே நாம் கூறும் ஸலாமை கேட்கக் கூட இயலாது. மாறாக வானவர்கள் தான் அதைச் சேர்ப்பிக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட இறந்தவருக்கும், இந்த உலகுக்கும் நேரடியாக யாதொரு தொடர்பும் கிடையாது என்பதையும் இது தெளிவாகக் கூறுகின்றது. நேரடித் தொடர்பு இருக்கின்றது என்றால் இதற்கென்றே இறைவன் சில வானவர்களை நியமிக்க வேண்டியதில்லை.

“உங்களின் இல்லங்களைக் அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! எனது அடக்கத்தலத்தை விழாத் தலமாக ஆக்காதீர்கள். என் மீது ஸலவாத் கூறுங்கள்! நீங்கள் எங்கிருந்து ஸலவாத் கூறினாலும் என்னிடம் அது சேர்ப்பிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி). நூல் : நஸாயீ

முந்தைய ஹதீஸ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது சொல்லப்படும் ஸலாம் பற்றிக் குறிப்பிடுகின்றது. இந்த ஹதீஸ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக நாம் கூறும் ஸலவாத் பற்றிக் குறிப்பிடுகின்றது.

ஸலவாத்தை நான் செவியுறுகிறேன் என்றோ, ஸலவாத் கூறும் இடத்திற்கு வருகை புரிகிறேன் என்றோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. என்னிடம் அது சேர்ப்பிக்கப்படும் என்றே கூறுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கூட மரணத்திற்குப் பின் இவ்வுலகத்துடன் – இவ்வுலகத்து மாந்தருடன் – நேரடியாக யாதொரு உறவும் கிடையாது என்பது இதன் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புனித ஆத்மாவின் நிலையே இதுவென்றால் மற்றவர்களின் ஆத்மாக்கள் எப்படி இவ்வுலகுக்கு வருகை முடியும்? பேய்களாக எப்படி உலா வர முடியும்? பேய்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் இடமில்லை என்பதற்கு இதுவும் தெளிவான சான்றாக அமைந்துள்ளது.

மனிதர்களில் நபிமார்கள் மிகவும் உயர்வானவர்கள் என்றால் அதற்கு அடுத்த நிலையை உடையவர்கள் ஷஹீத்கள் எனும் உயிர்த்தியாகிகளாவர்.

சத்தியத்தை நிலைநாட்டும் அறப்போரில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அடியார்களின் கடன் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதிலிருந்து இவர்களின் உயர்வான நிலையை அறிந்து கொள்ளலாம்.

இந்த உயிர்த் தியாகிகளுடைய ஆவிகளின் நிலையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்குகின்றார்கள்.

உயிர் தியாகிகளின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைகளின் கூட்டுக்குள் (வைக்கப்பட்டு) சொர்க்கத்தில் விரும்பியவாறு அவை சுற்றித் திரியும். பின்னர் அர்ஷின் அடியில் தொங்கிக் கொண்டிருக்கும் விளக்குகளின் அருகில் அவை நெருங்கும். இறைவன் அவர்களுக்குக் காட்சி தந்து நீங்கள் விரும்புவது என்ன? என்று கேட்பான். எங்கள் இறைவா நாங்கள் எதை விரும்புவது? நீ உனது படைப்பினங்களில் எவருக்கும் வழங்காதவற்றை எங்களுக்கு வழங்கியிருக்கிறாயே என்பார்கள். மீண்டும் அதே கேள்வியை இறைவன் கேட்பான். ஏதேனும் கேட்காவிட்டால் இறைவன் விடமாட்டான் என்று அவர்கள் அறிந்து கொண்டபின் எங்கள் இறைவா! எங்களை மண்ணுலகுக்கு மீண்டும் நீ திருப்பி அனுப்ப வேண்டும். நாங்கள் உனது பாதையில் மீண்டும் போர் புரிய வேண்டும். மீண்டும் ஒரு முறை உன் பாதையில் நாங்கள் கொல்லப்பட வேண்டும் என விரும்புகிறோம் என்பார்கள். உயிர் தியாகத்திற்குக் கிடைக்கும் பரிசுகளைக் கண்டதனால் இவ்வாறு விரும்புவர். அப்போது “திரும்பச் செல்வது தவிர வேறு தேவை இவர்களுக்கு இல்லை என்பதால் அப்படியே அவர்கள் விடப்படுவார்கள்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி). நூல் : முஸ்லிம் 3834

இறைவனுக்காகத் தங்கள் உயிரை அர்ப்பணித்தவர்கள் மிகவும் உயர்வான ஒரு காரியத்திற்காக உலகுக்குத் திரும்பி வர அனுமதி கேட்கின்றார்கள். உயர்வான பதவியைப் பெற்றவர்கள் உயர்வான பணிக்காக உலகுக்கு வருவதற்கு அனுமதி கேட்டும் இறைவன் மறுத்து விடுகின்றான்.

ஸுனன் சயீத் பின் மன்சூர் நூலில் “இறந்தவர்கள் மண்ணுலகுக்கு வர முடியாது என்று விதியாக்கி விட்டேன்” என இறைவன் அப்போது கூறுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வளவு தெளிவான ஆதாரங்களைக் கண்ட பிறகு, இறந்தவர்களின் ஆவிகள் இவ்வுலகுக்கு வரமுடியும் என்று நம்பலாமா? அப்படி நம்புவது இஸ்லாமாக இருக்க முடியுமா?

மிகவும் உயர்ந்த நிலையை அடைந்துள்ள நபிமார்களின் ஆத்மாக்களும், உயிர்த் தியாகிகளின் ஆத்மாக்களும் திரும்ப வர இயலாது என்பது நிரூபனமான பின் மற்ற ஆத்மாக்கள் பேய்களாக உலகுக்கு வர முடியும் என்பதை நம்ப முடியுமா?

தங்களின் உள்ளங்களில் ஊறிப்போன பேய்கள் பற்றிய நம்பிக்கையை இஸ்லாம் மறுக்கின்றது என்று தெளிவாகத் தெரிந்தவுடன் பேய்களை விரட்டியடித்து விடும் அளவுக்கு உறுதியான ஈமான் உள்ளவர்களும் முஸ்லிம்களில் உள்ளனர். இவர்களுக்கு இதுவரை நாம் எடுத்து வைத்த சான்றுகளே போதுமானதாகும். இதற்கு மேல் இவர்களுக்கு விளக்கம் தேவையில்லை.

திருக்குர்ஆனே கூறினாலும், திருத்தூதரே சொன்னாலும் தங்களின் பாரம்பர்யமான நம்பிக்கையை விட்டுவிடத் தயங்குபவர்களும் நம்மில் உள்ளனர். அல்லாஹ்வை விடவும், அவனது தூதரை விடவும் இத்தகையவர்களுக்கு இன்னும் ஆயிரம் சான்றுகளைச் சமர்ப்பித்தாலும் இவர்கள் பேய்களின் பிடியிலிருந்து விடுபடப் போவதில்லை. இவர்களை நாம் விட்டு விட வேண்டியது தான்.

இன்னும் சிலர் இருக்கின்றார்கள். இவர்கள் தங்களின் பாரம்பர்ய நம்பிக்கையையும் விடமுடியாமல், அதே நேரத்தில் நாம் எடுத்துக் காட்டிய பேய்களுக்கு எதிரான சான்றுகளை மறுக்கவும் முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பவர்கள்.

ஸஃபர் மாதமும் முஸ்லீம்களின் நிலையும்

*நபிகளாருக்கு சஃபர் மாதத்தில்தான் நோய் ஏற்பட்டதா?*

நபி (ஸல்) அவர்களுக்கு பல தடவை நோய் ஏற்பட்டுள்ளது. மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்று அவர்களை என் கையால் தொட்டு, *“அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே!”* என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், *“ஆம்; உங்களால் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று நான் (ஒருவனே) அடைகிறேன்”* என்று சொன்னார்கள்.

நான், *“(இந்தத் துன்பத்தின் மூலம்) தங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதா இதற்குக் காரணம்?”* என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆம்’ என்று கூறிவிட்டுப் பிறகு, *“ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்து விடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் விடுவதில்லை”* என்று சொன்னார்கள்.

நூல் : *புகாரி (5660)*

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி ஸல் அவர்கள் *நோய்வாய்ப்பட்டிருந்த சமயம்) அன்சாரிகள் தமது சபைகளில் ஒன்றில் (அமர்ந்தபடி) அழுது கொண்டிருந்தபோது அபூபக்ர் (ரலி) அவர்களும், அப்பாஸ் (ரலி) அவர்களும் அந்த வழியாகச் சென்றார்கள். அப்போது, அப்பாஸ் (ரலி) அவர்கள் (அல்லது அபூபக்ர் -ரலி- அவர்கள்), *“நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?”* என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், *“நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (கூடி) அமர்ந்திருந்த அவையை நினைத்துப் பார்த்தோம். (அதனால் அழுகிறோம்.)”* என்று பதிலளித்தார்கள்.

அப்பாஸ் (ரலி) அவர்கள் (அல்லது அபூபக்ர் (ரலி) அவர்கள்), நபி (ஸல்) அவர்களிடம் சென்று, இந்த விஷயத்தைத் தெரிவித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் தம் சால்வையின் ஓரத்தைத் தம் தலையில் கட்டியிருந்த நிலையில் வெளியே வந்து, (உரை நிக்ழ்த்துவதற்காக) மிம்பரில் (மேடையில்) ஏறினார்கள் – அந்த நாளுக்குப் பிறகு அவர்கள் மிம்பரில் ஏறவில்லை. அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றிய பிறகு, *“அன்சாரிகள் விஷயத்தில் (நல்லவிதமாக நடந்து கொள்ளும்படி) உங்களுக்கு நான் அறிவுரை கூறுகிறேன். ஏனெனில், அவர்கள் என் இரைப்பை; என் கருவூலம் ஆவர். தம் மீதிருந்த பொறுப்பை, அவர்கள் நிறைவேற்றி விட்டார்கள். இனி அவர்களுக்குரிய உரிமை தான் எஞ்சியுள்ளது. ஆகவே, அவர்களில் நன்மை புரிவோரிடமிருந்து (அந்த நன்மையை) ஏற்றுக் கொண்டு, அவர்களில் தவறிழைப்பவரை மன்னித்து விடுங்கள்”* என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி (3799)

நபிகளார் பல நேரங்களில் நோய் ஏற்பட்டிருந்தாலும் இறுதி காலகட்டத்தில் ஏற்பட்ட நோய் தொடர்பாகவே பரவலாகப் பேசப்படுகிறது. அதில் அவர்கள் இறக்கும் காலகட்டத்தில் ஏற்பட்ட நோய் தொடர்பாக நபிமொழிகளில் அதிகம் கூறப்பட்டுள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, *யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்டுத்துவானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிவிட்டனர்”* என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையாயின் நபி (ஸல்) அவர்களின் அடக்கவிடத்தைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருந்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.

நூல் : *புகாரி (1330)*

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, அவர்களின் நோய் அதிகரித்தபோது, எனது வீட்டில் தங்கி சிகிச்சையும் பராமரிப்பும் பெற, தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு அவர்களும் அனுமதி வழங்கிவிட்டனர். அப்போது தமது கால்கள் தரையில் இழுபட, அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில் தொங்கியபடி (என் வீட்டிற்குப்) புறப்பட்டார்கள்.

நூல் : *புகாரி (198)*

இதுபோன்ற நபிமொழிகள் இருந்தாலும் எந்த நாளில் எந்த மாதத்தில் ஏற்பட்டது என்பதற்கு ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையில் எந்தச் செய்தியும் இடம்பெறவில்லை.

நபி (ஸல்) அவர்கள் சஃபர் மாதம் இருபதாம் நாள் திங்கள் கிழமை நோயுற்றார்கள்.

அறிவிப்பவர் : சுலைமான் பின் தர்கான் அத்தைமீ,

நூல் : *தலாயிந் நுபவா – பைஹகீ, பாகம் : 7, பக்கம் : 234*

இச்செய்தியை அறிவிக்கும் சுலைமான் பின் தர்கான் அத்தைமீ என்பவர் நபித்தோழர் அல்ல. நபிகளாருக்கு நடந்த நிகழ்வுகளை அவர்களைப் பார்த்த நபித்தோழர்கள் மட்டுமே அறிவிக்க முடியும். எனவே இந்தச் செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகும்

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி பத்தாம் வருடம் சஃபர் மாதம் 11 ஆம் நாள் புதன் கிழமை நோயுற்றார்கள்.

அறிவிப்பவர் : முஹம்மத் பின் கைஸ்,

நூல் : தபகாத்துல் குப்ரா, பாகம் : 2, பக்கம் : 272

இந்தச் செய்தியை அறிவிக்கும் முஹம்மத் பின் கைஸ் என்பவர் நபித்தோழர் அல்ல. எனவே இந்தச் செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தி என்பதில் ஐயமில்லை. மேலும் *இரண்டாவது அறிவிப்பாளர் அபூமிஃஷர் என்பவர் பலவீனமானவராவார். இதைப் போன்று முஹம்மத் பின் உமர் என்ற அல்வாகிதி என்பவர் பொய் சொல்பவர் என்று கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டவர்.*

*எனவே இந்தச் செய்தி மிகவும் பலவீனமானது.* நபிகளார் இறுதிக்காலத்தில் கடுமையான நோயில் பாதிக்கப்பட்ட்டது உண்மை. ஆனால் அது சஃபர் மாதம் என்பதற்கும் புதன் கிழமை என்பதற்கும் ஆதாரம் இல்லை. மேலும் குறிப்பிட்ட நாளில் நோய்யுற்றதால் அந்த நாள் பீடை என்று சொல்வதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.

*ஏகத்துவம்*

I love my wife

மனைவியை காதலியுங்கள்..

திருமணம் செய்துக்கொள்வதன் மூலம்
நீங்கள் வெறும் மனைவியை மட்டும்
அடைவதில்லை.

அன்றைய தினத்திலிருந்து உங்கள் வாழ்வின்
இறுதி நாள் வரை அவள் தான் உங்கள்
இல்லறத்தின் பங்காளி, வாழ்வின் நீண்ட
பாதையில் வழித்துணை மற்றும் உற்ற
தோழி எல்லாம்.

அன்று முதல் அவள் தான் உங்களுடைய
ஒவ்வொரு நொடியையும்,
தினத்தையும், வருடங்களையும்,
சுகங்களையும், துக்கங்களையும்,
கனவுகளையும், கவலைகளையும்
உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறவள்

.நீங்கள் நோயுறும் போது, அவள்
உங்களை மிகுந்த அக்கறையுடன்
கவனித்துக் கொள்வாள். உங்களுக்கு
ஏதேனும் உதவி தேவைப்படும் போது
ஓடோடி வருபவளும் அவள் தான்.
உங்களுடைய ரகசியங்களை அவள்
பாதுகாப்பாள். உங்களுக்கு
ஆலோசனைகள் தேவைப்படும் போது
அவள் தான் உங்கள் மதி மந்திரி.
உங்கள் மனைவி தான் உங்களுடன்
எப்போதும் உடன் இருப்பவள். காலையில்
நீங்கள் கண் விழிக்கும் போது உங்கள்
கண்கள் பார்க்கும் முதல் காட்சி
அவளுடைய கண்களாகத்தான் இருக்கும்.
அன்றைய தினம் முழுவதும் அவள்
உங்களுடன் இருப்பாள்.

சில சந்தர்ப்பங்களில் உடலால் உங்களருகில்
அவள் இருக்க முடியாமல் போகும்
போது அவளது நினைவுகள் உங்களை
சூழ்ந்திருக்கும். காரணம் அவளது
ஆன்மா, மனம், இதயம் மூன்றும்
இறைவனிடம் உங்களுக்காக
பிரார்த்தித்துக் கொண்டிருக்கும். அந்த
தின முடிவில் நீங்கள் படுக்கைக்கு
போகும் முன்பு நீங்கள் கடைசியாக
பார்ப்பது அவளது கண்களாகத்தான்
இருக்கும்.

உறங்கி விட்டப் பிறகும்
உங்கள் கனவிலும் அவள் வலம் வருவாள்.
சுருக்கமாகச் சொன்னால் அவள் தான்
உங்கள் முழு உலகம், நீங்கள் தான் அவளது
முழு உலகம்.

கணவன் மனைவி உறவைப்பற்றி
குர்ஆனை விட சிறப்பாக யார் தான்
இயம்பிட முடியும்..?

இந்த உறவின்
தன்மையைப் பற்றி, அது இருக்க
வேண்டிய நெருக்கத்தைப் பற்றி
பேரறிவாளன் அல்லாஹ்வின்
வர்ணனைகளை பாருங்களேன்..
“அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப்
போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு
ஆடைகளைப் போன்றவர்கள்”.(சூரா அல்-
பகரா.2:187).

எவ்வளவு சத்தியமான உவமை, ஆம்
உண்மையில் கணவனும் மனைவியும்
ஒருவருக்கொருவர் ஆடைகளைப்
போன்றவர்கள். காரணம் ஆடைகள்
மனிதர்களுக்கு மானத்துக்கும்,
உடலுக்கும், பாதுகாப்பை,
மரியாதையை, அழகை, கண்ணியத்தை
வழங்குகின்றன. கடும் பனி
பிரதேசத்தில் பயணிக்கும்
பிரயாணிக்கு அவனது ஆடை எந்த
அளவுக்கு சுகத்தையும்,
பாதுகாப்பையும் தரும் என்று
கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.
அந்த அளவுக்கு நமது வாழ்க்கைப்
பாதையில் நமக்கு சுகத்தை,
பாதுகாப்பை, கண்ணியத்தை
வழங்குபவள் மனைவி தான்.

இந்த உறவு மனித வாழ்க்கையின்
மற்றெல்லா உறவுகளையும் விட மிக
ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம்.
திருமணத்திற்குப் பிறகு திடீரென்று
இணைந்த இருவரது உள்ளங்களிலும்
பெருக்கெடுக்கும் காதல், பிரியம்,
நெருக்கம், தாம்பத்யம், கருணை,
கனிவு, பரிவு, விட்டுக்கொடுத்தல்
முதலானவற்றிற்கு நிகரில்லை
அதற்கான காரணம் என்ன என்றும் நாம்
அறிய முனைவதில்லை.

இவ்வளவு நிகரற்ற உணர்வலைகள் இருவரது
உள்ளங்களிலும் சுரந்து பெருகி
பெருவெள்ளமாய் அவர்களது வாழ்வை
வளமாக்க அவர்களது படைப்பாளன்
கருணைமிக்க அல்லாஹ் தான் தனது
அளப்பறிய அன்பாலும், நிகரற்ற
அருட்கொடைகளாலும், தனது
பேராற்றல் மிக்க நுண்ணறிவாலும்
காரணகர்த்தாவாக இருக்கின்றான். இந்த
உண்மையை அல்-குர்ஆன் இந்த வசனத்தில்
உணர்த்துகிறது.
அல்லாஹ் உங்களுக்கு துணைகளை
ஏற்படுத்தினான் (உங்கள் வாழ்க்கை
துணைகளை உங்களிலிருந்தே
உண்டாக்கினான்.)
(சூரா அல்-நஹ்ல் 16:72)

அல்லாஹ் இதன் மூலம் அவனது
அத்தாட்சிகளை இந்த பிரபஞ்சத்தில்
தேடுவோருக்கு இந்த உணர்வுகள்
அவனது அத்தாட்சிகளில் உள்ளவை தான்
என்று உணர்த்தி அவனது வல்லமையை
மனிதர்கள் உணர்வதற்காக கீழ்கண்ட
வசனத்தில் சொல்கின்றான்:
மேலும் அவனது அத்தாட்சிகளில்
ஒன்று, அதாவது அவன் தான்
உங்களுக்கு துணைகளை
உங்களிலிருந்தே ஏற்படுத்தினான்,
நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து
கொள்ள வேண்டுமென்பதற்காக, உங்கள்
உள்ளங்களில் அன்பையும்
கருணையையும் பெருக செய்தான்.
நிச்சயமாக, அறிவுடையோருக்கு
இதில் தெளிவான அத்தாட்சி
இருக்கிறது’ (சூரா: அல்-ரூம் 30:21).

ஆனால், அல்லாஹ்வுக்கு மனிதனின்
மனநிலையைப் பற்றி நன்கு தெரியும்.
அது நீண்ட காலம் ஒரே நிலையில்
இருக்காது, அடிக்கடி அதன் தன்மைகள்
மாறும், உணர்வுகள் வேறு வடிவம்
பெறும், ஏன்.! காலம் ஓட ஓட காதல் கூடக்
கசக்கத் துவங்கும். முறையான கவனம்
செலுத்தப்படவில்லை என்றால் திருமண
பந்தம் தொய்வடையக் கூடும். நமது
முயற்சி இல்லாமல் இல்லறத்தில் எந்த
நேரமும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும
ென்று எண்ணிவிடக்கூடாது. நாம்
அரும்பாடு பட்டுக் கட்டிய அந்த
இல்லறக்கூட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக
நிலைத்திருக்க வேண்டுமென்றால்
கணவன் மனைவி இருவரது கூட்டு
பங்களிப்பு மிக மிக அவசியம். திருமண
பந்தம் என்ற மரம் தழைத்தோங்கி வளர
வேண்டுமென்றால் செடியை ஊன்றி
விட்டால் மட்டும் போதாது, அந்த மரம்
வளர வேண்டிய மண்ணுக்கு உரமிட்டு,
நீரிட்டு, பரிமாரித்து, பாதுகாக்கப்பட்ட
ால் தான் முடியும்.

பெருமானார் நபி
(ஸல்..) அவர்கள் தமது சீரிய
பணிகளுக்கிடையேயும் தமது இல்லற
வாழ்வின் மகிழ்ச்சிக்காகவும் நேரம்
ஒதுக்கிய சம்பவங்களை நினைவு
கூர்ந்து பாருங்கள்.
தங்களது மனைவி ஆயிஷாவை பாலை
வெளியில் அழைத்துச் சென்று
தங்களுக்குள் ஓட்டப்பந்தயம் வைத்தார்கள்.
அதில் அன்னை ஆயிஷா வென்றார்.
ஆனால் சில காலத்திற்குப் பிறகு
அன்னையாருக்கு எடைகூடிய
காரணத்தால் அவர்களை நபியவர்கள்
வென்றார்கள். மேலும் தங்களது
மனைவியை எத்தியோப்பிய இளம்
வீரர்களின் வீர விளையாட்டுக்களை
காண அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

உங்களது மனைவியைப் பற்றி நீங்கள்
கொண்டிருக்கும் அன்பை அடிக்கடி
வெளிக்காட்டுவது, உறவை மேலும்
மேலும் பலப்படுத்த உதவும்.
நீங்கள் உங்கள் மனைவி மீது செலுத்தும்
அன்புக்கு அல்லாஹ் கூலி கொடுக்கத்
தவறுவதில்லை என்ற உண்மையை
எண்ணிப்பாருங்கள். அதனால் தான் நபி
பெருமானார் (ஸல்..) அவர்கள்
சொன்னார்கள்:அல்லாஹ்வின் மகிழ்ச்சியை நாடி நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும்
நற்கூலி உண்டு, உங்கள் மனைவியின்
வாயில் நீங்கள் அன்போடு ஊட்டி விடும்
ஒரு கவளம் உணவு உட்பட.

ஆகவே, நீங்கள் செய்யக்கூடிய
சின்னஞ்சிறு அன்பான காரியங்களைக்
குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள்.
மனைவிக்கு உணவு ஊட்டி விடுவது,
வாகனங்களில் அவர்கள் ஏற உதவுவது
போன்ற சிறு சிறு
விஷயங்களானாலும் சரியே.
அல்லாஹ்வின் தூதர் தங்களது மனைவி
ஒட்டகத்தில் ஏறி அமர தங்களது கால்
முட்டியை மடித்து அமர்ந்து உதவி
இருக்கிறார்கள் அல்லவா…?
அடிக்கடி இருவரும் சேர்ந்து
அல்லாஹ்வை வணங்குவதில் ஈடுபட
முயற்சி எடுத்துக்கொள்ளுங்கள். வணக்க
வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக
இரவில் விழித்தெழும் தம்பதியர்களை
நபி (ஸல்..) அவர்கள் வாழ்த்தியிருக்க
ிறார்கள்.

மேலும் முதலில் எழும்
தம்பதியரில் ஒருவர் மற்றொருவரை
விழிக்கச் செய்வதற்காக குளிர்ந்த நீரை
முகத்தில் தெளிக்கத் தூண்டி
இருக்கின்றார்கள். எப்போதும்
சொல்லாலும் செயலாலும் உங்கள்
மனைவியரிடம் நல்லவிதமாக நடந்துக்
கொள்ள மிகுந்த முயற்சி எடுத்துக்
கொள்ளுங்கள். மலர்ந்த முகத்துடன்
அவர்களிடம் எப்போதும் பேசுங்கள்,
குடும்ப விஷயங்களில் அவர்களது
ஆலோசனைகளை கேட்டுப் பெறுங்கள்,
பிற விஷயங்களிலும் அவர்களது
அபிப்ராயங்களை கேட்டுத் தெரிந்து
கொள்ளுங்கள். அவர்களுடன் இருந்து
அளவளாவ நிறைய நேரம் எடுத்துக்
கொள்ளுங்கள். இந்த விஷயத்தில்
அல்லாஹ்வின் தூதர் சொன்ன
பொன்மொழிகளை மறந்து விடாதீர்கள்.
உங்களில் மிகச் சிறந்தவர் தங்களது
மனைவியரிடம் மிகச் சிறந்தவர் என்று
பெயர் எடுப்பவர் தான்.

இறுதியாக, தம்பதியர் இணங்கி;
இருப்பதும், தங்களது மரணம் வரை
ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு
செலுத்தி வாழ்வதும் இயல்பு தான்
என்றாலும், அது போதாது.
உங்கள் மனைவியிடம் அன்புடன்
நடந்துக்கொண்டால் மட்டும் போதாது,
அவர்கள் விரும்புவதை எல்லாம்
நீங்களும் விரும்ப வேண்டும். அவர்களது
குடும்பத்தினர் மற்றும் அவர்களது
அன்புக்குப் பாத்திரமான
ஒவ்வொருவரும் உங்கள் அன்புக்குப்
பாத்திரமானவர்களாக ஆக வேண்டும்.
விருந்தினர்களாக உங்கள் மனைவியரின்
குடும்பத்தினரோ, அவர்களுக்கு
விருப்பமானவர்களோ உங்கள்
இல்லத்திற்கு வந்தால் அவர்களை
வரவேற்கும் முதல் நபராக நீங்கள் இருக்க
வேண்டும். இதற்கும் மேலாக ஒரு
விஷயம் இருக்கிறது. உங்களது மரணம்
வரை அவர்களை விரும்பினால் மட்டும்
போதாது, அவர்களை நீங்கள்
விரும்புவது உண்மையென்றால்
மரணத்திற்குப் பிறகும் அவர்கள் உங்களது
மனைவியராக இருக்க விருப்பம் கொள்ள
வேண்டும்.

நாம் தான் மரணத்திற்குப்
பிறகும் நிரந்தர வாழ்க்கை இருப்பதை
நம்பிக்கை வைத்துள்ளோமே. சூரா
அல்-ஜுக்ருஃப் 43:70 ல்
அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்:
இவ்வுலகில் நல் அமல்களை செய்தோர்
தங்களது வாழ்க்கைத்
துணைவியருடனும், தங்களது
பிள்ளைகளுடனும் சொர்க்கம்
புகுவார்கள்.

இந்த வசனத்தை உண்மையாக்க நபி (ஸல்..)
எவ்வளவு அக்கறை செலுத்தியுள்ளார
்கள் என்று பாருங்கள்: 25 வருட காலம்
தங்களது வாழ்க்கைத் துணையாக
இருந்த அன்னை கதீஜா பிராட்டியாரின்
மறைவுக்குப் பின்னரும் நீண்ட காலம்
ஆகியும் அன்னையாரின்
குடும்பத்தினரை நபியவர்கள் மறக்காமல்
அன்பு செலுத்தி வந்தார்கள். தங்களது
வீட்டில் எப்போது ஆடு அறுத்தாலும்
அன்னை கதீஜாவின் குடும்பத்தினருக
்கு ஒரு பங்கை அனுப்ப தவறியதில்லை.
அல்லாஹ்வின் வேதத்திலும், அண்ணல்
நபி (ஸல்..) அவர்களின் வாழ்விலும்
நிச்சயம் மனிதாபிமானம் நீடுடி வாழ
அகிலத்தோருக்கு பற்பல படிப்பினைகள்
உண்டு.

*🍃அறிவியல் குறித்த முன்னறிவிப்பு-

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

          *💁🏻‍♂ வருமுன் உரைத்த*
                               ⤵
                             *இஸ்லாம்*

            *✍🏻...தொடர் [ 06 ]*

*🍃அறிவியல் குறித்த முன்னறிவிப்பு-(05)*🍃


*🍃முளைகளாக மலைகள்🍃*

*🏮🍂பூமியில் அமைக்கப்பட்டுள்ள மலைகளைப் பற்றி அல்லாஹ் கூறும் போது அதை முளைகளாக நாட்டியிருக்கிறோம் என்று கூறுகிறான்.*

_*وَالْجِبَالَ أَرْسَاهَا*_

_*மலைகளை முளைகளாக நாட்டினான்.*_

*📖திருக்குர்ஆன் 79:31📖*

_*🍃பூமியைத் தொட்டிலாகவும், மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா❓*_

*📖திருக்குர்ஆன் 78:6,7📖*

_*وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُم مَّاءً فُرَاتًا*_

_*அதில் உயர்ந்த முளைகளை நிறுவினோம். இனிமையான நீரையும் உங்களுக்குப் புகட்டினோம்.*_

*📖திருக்குர்ஆன் 77:27📖*

_*وَالْأَرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَ وَأَنبَتْنَا فِيهَا مِن كُلِّ شَيْءٍ مَّوْزُونٍ*_

_*🍃பூமியை விரித்தோம். அதில் முளைகளை நட்டினோம். அதில் எடை வரையறுக்கப்பட்ட ஒவ்வொரு பொருளையும் முளைக்கச் செய்தோம்.*_

*📖திருக்குர்ஆன் 15:19📖*

_*وَأَلْقَىٰ فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَّعَلَّكُمْ تَهْتَدُونَ وَعَلَامَاتٍ ۚ وَبِالنَّجْمِ هُمْ يَهْتَدُونَ*_

_*🍃பூமி, உங்களை அசைத்து விடாதிருக்க அதில் முளைகளையும், நீங்கள் வழியறிவதற்காக பல பாதைகளையும், நதிகளையும், பல அடையாளங்களையும் அவன் அமைத்தான். நட்சத்திரத்தின் மூலம் அவர்கள் வழியை அறிந்து கொள்கின்றனர்.*_

*📖திருக்குர்ஆன் 16:15,16📖*

_*وَجَعَلْنَا فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِهِمْ وَجَعَلْنَا فِيهَا فِجَاجًا سُبُلًا لَّعَلَّهُمْ يَهْتَدُونَ*_

_*பூமி அவர்களைச் சாய்த்து விடாதிருப்பதற்காக முளைகளை ஏற்படுத்தினோம். அவர்கள் வழி காண்பதற்காக பல நீண்ட பாதைகளையும் அதில் ஏற்படுத்தினோம்.*_

*📖திருக்குர்ஆன் 21:31📖*

_*أَمَّن جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا وَجَعَلَ لَهَا رَوَاسِيَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا ۗ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ*_

_*🍃(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா❓ அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி, அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா❓ அல்லாஹ்வுடன் வேறு கடவுளா❓ இல்லை! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.*_

*📖திருக்குர்ஆன் 27:61📖*

_*خَلَقَ السَّمَاوَاتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا ۖ وَأَلْقَىٰ فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَابَّةٍ ۚ وَأَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً فَأَنبَتْنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍ كَرِيمٍ*_

_*நீங்கள் பார்க்கக் கூடிய தூண் இன்றி வானங்களைப் படைத்தான். உங்களைச் சாய்த்து விடாதிருக்க பூமியில் முளைகளைப் போட்டான். அதில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரவச் செய்தான்.*_

*📖திருக்குர்ஆன் 31:10📖*

_*وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ مِن فَوْقِهَا وَبَارَكَ فِيهَا وَقَدَّرَ فِيهَا أَقْوَاتَهَا فِي أَرْبَعَةِ أَيَّامٍ سَوَاءً لِّلسَّائِلِينَ*_

_*🍃அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். நான்கு நாட்களில் அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.*_

*📖திருக்குர்ஆன் 41:10📖*

*☄ஒரு பொருள் இன்னொரு பொருளை விட்டும் பிரிந்து விடாதிருப்பதற்காக அறையப்படுவதே முளைகளாகும்.*

*☄இந்தப் பூமி பல்வேறு அடுக்குகளால் அமைக்கப்பட்டுள்ளது. மேல் அடுக்குகள் எடை குறைந்தவையாகவும், உள் அடுக்குகள் கனத்த எடை உடையவையாகவும் உள்ளன.*

*☄வேகமாகப் பூமி சுழலும் போது உள்ளடுக்கில் உள்ள கனமான பொருட்களும், மேலடுக்கில் உள்ள எடை குறைவாக உள்ள பொருட்களும் ஒரே வேகத்தில் சுற்ற இயலாது.*

*☄இந்த நிலை ஏற்பட்டால் மேல் அடுக்கில் உள்ள மனிதர்கள் தூக்கி எறியப்படுவார்கள்; கட்டடங்களெல்லாம் நொறுங்கி விடும்.*

*🏮🍂இதைத் தடுக்க வேண்டுமானால் கனமான அடுக்குகளையும், கனம் குறைந்த அடுக்குகளையும் இணைக்கும் விதமாக முளைகள் நாட்டப்பட வேண்டும். அதைத் தான் மலைகள் செய்கின்றன.*

*ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள மலைகள் காரணமாக மேல் அடுக்குகளும், கீழ் அடுக்குகளும் ஒன்றையொன்று பிரிந்து விடாத வகையில் சுழல முடிகிறது.*

_*🏮🍂இந்த மாபெரும் அறிவியல் உண்மை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டிருப்பது, திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கு மற்றொரு சான்றாகும்.*_

*🏮🍂பூமி முதல் உருவாகி பிறகு தான் மலைகள் உருவாகின என்றும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதற்கு மலைகள் முளைகளாக நாட்டப்பட்டுள்ளன என்ற வசனங்கள் எதிரானவை என்று கருதக் கூடாது.*

*🏮🍂முதல் இரண்டு நாட்களில் பூமியைப் படைத்ததாகவும், பிறகு இரண்டு நாட்களில் பூமியில் மலைகளை நிறுவி அதிலுள்ள உணவு உற்பத்திக்கான ஏற்பாடுகள் செய்ததாகவும் திருக்குர்ஆன் 41:10 வசனம் கூறுவதைக் கவனிக்கவும்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻