கட்டிமேடு-ஆதிரெங்கம் கிளை சார்பாக கடந்த 26-6-2013 அன்று வேளாகண்ணியை சேர்ந்த சகோதரர் அய்யூப் அவர்கள் தனது 7.5 குழி காலியான மனையை மார்க்க பனிக்காக தானமாக பத்திர பதிவு செய்து கொடுத்தள்ளார். அல்ஹம்துலில்லாஹ். (அவருக்காக துஆ செய்யவும்.) மேலும் இந்த இடத்தை முறையாக அலந்து, பள்ளியை விரிவுபடுத்தவுள்ளதால் உங்கள் பொருளாதார உதவியை எதிர்பார்க்கிறோம்
மஸ்ஜிதுல் அக்ஸா கமிட்டி(TNTJ)
நமதூர் தவ்ஹீத் பள்ளியில் ரமலான் ஏற்பாடு
இன்ஷா அல்லாஹ் வருகிற ரமலானில் கட்டிமேடு & ஆதிரெங்கம் TNTJ கிளையின் சார்பாக ரமலான் மாதம் முழுவதும் நோன்பாளிகள் நோன்பு திறக்க அட்டவனையை மூன்றாக(3) பிரித்துள்ளோம். அதற்கான செலவினை பகிர்ந்து கொள்ளளுங்கள். கீழ்கண்டவற்றை தனி நபராகவோ , குடும்பமாகவோ , கூட்டாகவோ செய்யலாம்
1) நோன்பு கஞ்சி காச்ச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (ஒரு முறை ரூ 1,500)
2) பள்ளியிலேயே நோன்பு திறக்கவும் இப்தார் விருந்து (ஒரு முறை ரூ 1,000)
3) சஹர் உணவு ஏற்பாடு செய்யப்படவுள்ளது. (ஒரு முறை ரூ 4,000)
மிகவும் சிறப்புக்குறிய லைத்துல் கதுர் இரவை நாடி ரமலான் கடைசி 10 இரவும் மட்டும் சஹர் உணவு
தாங்கள் கொடுக்கவிருக்கும் நாளையும், பொருளையும்
எங்களுக்கு தெரியப்படுத்தவும். அட்டவணையிட்டு முறையாக செயல் பட ஏதுவாக இருக்கும்.
கஞ்சியை சென்ற ஆண்டு முதல் நாமே காச்சுவதாக நிர்வாகம் முடிவு செய்து தொடங்கபட்டுவிட்டது. மேலே உள்ள தொகை உத்தேசமாக நிர்ணயம் செய்துள்ளோம் . (அரசிடம் இலவச அரிசியை இந்த ஆண்டே பெற ஏற்பாடு நடக்கிறது. துவா செய்யவும்.)
அல்லாஹ் மேன்மேளும் உங்களுக்கு பரக்கத்தும், ரஹ்மத்தும் செய்வானாக. ஆமீன்.
இந்த செலவினை பகிர்ந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்
பாஷித் :919894677930, பைசுல்லா :919976466464, சேக் :919698158143
Subscribe to:
Posts (Atom)